சீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி..!

பீஜிங், இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான ‘நெட்டிசன்’களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ‘தி டிப்ளோமட்’ என்ற பத்திரிகையில் மு சுன்ஷான் என்ற பத்திரிகையாளர் எழுதிய ‘சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது?’ என்ற கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு சுன்ஷான், சீன சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்து பிரபலமானவர். சீனாவில் டுவிட்டரை போன்ற ‘சினா வெய்போ’ … Read more

உரைக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்… – நடந்தது என்ன?

கீவ்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு சனிக்கிழமை இரவு, புதின் … Read more

மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் செபாஸ்டின் ஓஜியர் முதலிடம்..!

மெக்சிகோவில் நடைபெற்ற உலக ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸை சேர்ந்த 8 முறை சாம்பியனான செபாஸ்டின் ஓஜியர் முதலிடம் பிடித்தார். மலைப்பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஓஜியரை விட 27.5 வினாடிகள் பின்னால் வந்த பெல்ஜியத்தை சேர்ந்த தியரி நியூவில்லே இரண்டாம் இடம் பிடித்தார். பிரிட்டனை சேர்ந்த எல்ஃபின் எவன்ஸ் 3-வது இடமும், நடப்பு உலக சாம்பியனான கால்லே ரோவன்பெரா 4-வது இடத்தையும் பிடித்தனர். Source link

நெருக்கம் காட்டும் சவுதி – ஈரான்; பின்னணியில் சீனா – ‘கவனிக்கும்’ உலக நாடுகள்

தெஹ்ரான்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்பை மறந்து பரஸ்பர உறவை மேம்படுத்த சீனா அரசியல் தூதராக மாறியது உலக … Read more

பிரிட்டனில் பதற்றம்! இந்திய கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்… இந்தியா கடும் கண்டனம்!

இந்தியாவில்  காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், காவல்துறையினரால் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை அகற்ற முயன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பிரிட்டன் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய தூதரகத்திற்கு வெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் … Read more

எல்லையில்லா சேவை நோக்கம் கொண்ட நாடு கைலாசா: சாமியார் நித்தியானந்தாவின் செய்தி அலுவலகம் தகவல்

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி,2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்நாட்டுக்கு என்று தனிக் கொடி, பாஸ்போர்ட் எல்லாம் வெளியிட்டார். கைலாசாவில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்கலாம் என்று தெரிவித்தார். கைலாசாவுக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதையொட்டி, சமீபத்தில் அவரது சிஷ்யைகள் சிலர், ஐநா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியது கவனம் பெற்றது. ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, … Read more

பிரதமர் மோடியை புகழும் சீன நாட்டு இளைஞர்கள்| Chinese youth praise PM Modi

பீஜிங் : நம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் சீனாவில் பரவியுள்ள நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில், அவரை செல்லப் பெயர் சூட்டி பாராட்டி வருகின்றனர். நமக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் பல ஆண்டுகளாக எல்லை பிரச்னையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பிரதமர் மோடியை பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றனர். ‘சீனா வெய்போ’ என்ற சமூக ஊடகம், பிரதமர் மோடியை, ‘லாக்ஸியன்’ என செல்லப் பெயரிட்டு அழைத்துள்ளது. … Read more

லண்டனில் மூவர்ணக் கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்: பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்

லண்டன்: பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்த அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கு பிரிட்டிஷ் துணை தூதர் கிறிஸ்டினா ஸ்காட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அப்போது அவரிடம், லண்டனில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் வெளியில் இருந்த இந்திய … Read more

மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது. மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப் பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் மட்டும் பதிவாகியுள்ளது. கனமழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி … Read more

சேதி சொன்ன சிட்டுக் குருவியை மீட்டெடுப்போம்!

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருவதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்… கேட்கக் கேட்க சலிக்காத ஓசைதான் இந்த சிட்டுக் குருவியின் குரல்….பன்னெடுங்காலமாக மனிதர்களோடு ஒன்றிப் பழகி விட்ட ஒரு அற்புதமான உயிரினம் சிட்டுக் குருவி… தமிழ்த் திரைப்பாடல்களில் சிட்டுக்குருவிக்கு தனி இடம் உண்டு. நிலவுக்கு அடுத்தபடியாக பாடல்களில் அதிகம் இடம்பெற்ற பேசுபொருள் சிட்டுக்குருவிதான்! சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கும், சுதந்திரமாகச் சுற்றித் திரிய ஆசைப்படுவோருக்கும் … Read more