உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 13 லட்சத்து 98 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்

பெய்ஜிங், சீனாவில் பிரதமராக பதவி வகித்து வந்தவர் லி கெகியாங். எனினும், 2013-ம் ஆண்டு பதவிக்கு வந்ததும் தாராளவாத சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற அதிக நம்பிக்கையுடன் பார்க்கப்பட்டார். ஆனால், அவரது அதிகாரங்களை சீன அதிபர் ஜீ ஜின்பிங் கட்டுப்படுத்தியதுடன், அவரை ஓரங்கட்டவும் தொடங்கினார். அவருக்கு பதிலாக, கூட்டணியில் இருந்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார். இந்நிலையில், நாட்டின் பிரதமராக கடைசி முறையாக அவர் நேற்று விடை பெற்று கொண்டார். ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே கடந்த அக்டோபரில் கம்யூனிஸ்டு … Read more

நித்தியானந்தா விடு தூது… சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்!

குய்டோ/பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த, நித்யானந்தா, தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீனாவுடன் கை கோர்க்க முயற்சி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நித்யானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி கைலாசா நாட்டின் சார்பில் சீனாவுக்கும் அதிபர் ஜின்பிங்கிடம் நட்பு கரம் நீட்டியிருக்கிறார் நித்யானந்தா. சீன மக்கள் பொருளாதார வளம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைய … Read more

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் … Read more

அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவு…!

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலால், பாகிஸ்தான் தின இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 1940-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ல், இராணுவ அணிவகுப்பு நடைபெறும். பாகிஸ்தானில் தற்போது பணவீக்கம் அதிகரிப்பாலும், பாதுகாப்புத் துறைக்கான செலவை குறைக்க சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்து வருவதாலும், ராணுவ அணி வகுப்பை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. Source link

நைஜீரியாவில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் சாவு

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தின் தலைநகர் இகேஜாவில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் சென்றது. இந்த பஸ் அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டது. ஆனால் அப்போது அங்கு ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. அதனை பஸ் டிரைவர் கவனிக்காமல் சென்றதால் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் தண்டவாளத்தில் இருந்து பஸ் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

கொரோனாவுக்கு 3ஆம் ஆண்டு நினைவுத்தினம்… 200 உலக தலைவர்கள் கடிதம் – என்ன சொல்கிறார்கள்?

Third Year Anniversary Of Coronavirus: கடுமையான கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டது. இதை முன்னிட்டு,  சுமார் 200 உலகத் தலைவர்கள் ‘சமத்துவமான தடுப்பூசி விநியோகம்’ (Vaccine Equity) இன்று வெளியிடப்பட்ட கடிதத்தில்,”கொரோனா கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது உலகம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.  சமத்துவமின்மை “இப்போது எடுக்கப்பட்ட முடிவுகள், எதிர்கால உலகளாவிய சுகாதார நெருக்கடிகளுக்கு உலகம் எவ்வாறு தயாராகிறது மற்றும் செயல்படுகிறது … Read more

ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க விரைவில் அனுமதி!

ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலாடையின்றி குளித்ததற்காக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் சட்டப்போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர உடல் கலாசாரம் என்று அழைக்கப்படுவதை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க ஜெர்மனியின் லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகன் ஆகிய இடங்களில் … Read more

திவாலான சிலிக்கான் வேலி வங்கி! பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறதா அமெரிக்கா!

அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால், அந்நாட்டு வங்கி துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சிலிக்கான் வேலி வங்கி (SVB) ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிலிக்கான் வேலி வங்கி திவால்    பொருளாதார நிலையில் அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் செய்தி, அமெரிக்க … Read more

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை… வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை, மீட்புப்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். வடமேற்கு பகுதிகளில் அதிகனமழை பெய்த நிலையில், ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து, Burketown பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு வசித்து வந்த 53 குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், அங்கு வசிக்கும் சுமார் 100 பேரை, உடனடியாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். Source link