பிஜி நாட்டின் சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு தேச கட்டமைப்பு பணிகளில் இந்தியா… மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சுவா, இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருக்கு அந்நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த பயணத்தில் பிஜியின் துணை பிரதமர் பீமன் பிரசாத் உடன் நேற்று நடந்த சந்திப்பில், இரு நாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என மந்தரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, நடி நகரில் நடந்த 12-வது விஷ்வ இந்தி கூட்டமைப்பு நிகழ்ச்சியை … Read more

கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை ராணி கமிலா அணிய மாட்டார் எனத்தகவல்

லண்டன், மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது. இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.05கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.85 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,785,210 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் … Read more

உக்ரைன் போர் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரஷிய மாணவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு..!

மாஸ்கோ, – உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போரை, ரஷியர்களில் ஒரு தரப்பினரை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அதிபர் புதின் தலைமையிலான அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இந்த சூழலில் ரஷியாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை சேர்ந்த 20 வயதான பல்கலைக்கழக மாணவி ஒலேஸ்யா, உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதோடு போரில் ரஷியாவை விமர்சிக்கும் வகையில் … Read more

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வீசிய மணற்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு..!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வீசிய மணற்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சுழன்றடித்த புழுதி புயலால் சாலைகள், வீதிகளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மண், தூசி சூழ்ந்தது. இதையடுத்து, ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியது. புயலால், வாகனங்கள் அடித்துச் சென்று விபத்தை ஏற்படுத்துமென்ற அச்சத்தால், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.  Source link

உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

வாஷிங்டன், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நிக்கி ஹாலே களம் இறங்கி இருக்கிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம் நிக்கி ஹாலே உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதேகட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மட்டுமின்றி மேலும் சில நிர்வாகிகள் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய நிக்கி ஹாலே, தாம் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதை அறிவித்தார். தமது பெற்றோர் ஒரு சிறப்பான வாழ்க்கையை தேடி அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் . … Read more

லிபியா : அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 73 பேர் உயிரிழப்பு

வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 73 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர். அந்தவகையில்,  கஸ்ர் அல்காயரிலிருந்து 80 பேருடன் சென்ற படகு, லிபிய கடற்கரையில் கவிழ்ந்தது. இதில், 73 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 11 … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆளாகியுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியது: தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.32.07 அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.282-ஆக அதிகரிக்கும். அதேபோன்று, டீசலும் லிட்டருக்கு ரூ.32.84 உயர்த்தப்படும் நிலையில் அதன் விலை ரூ.262.8-லிருந்து … Read more

குகைக்குள் சிக்கி 18 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட கால்பந்து அணியின் கேப்டன் 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தாய்லாந்தில், வெள்ளப்பெருக்கின் போது குகைக்குள் சிக்கி உலகளவில் கவனத்தை ஈர்த்த சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழந்தான். சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள், கடும் மழைக்கு இடையே சிக்கிய கால்பந்து அணி சிறுவர்களும், பயிற்சியாளரும் 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.  கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த டுவாங்பெட், இங்கிலாந்தில் உள்ள புரூக் ஹவுஸ் கல்லூரி கால்பந்து அகாடமியில் கடந்தாண்டு சேர்ந்தார். இந்நிலையில், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக … Read more