கிரீஸில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு!

கிரீஸில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 350 பயணிகளுடன் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு சென்ற ரயில், லாரிசா எனும் பகுதியில் சரக்கு ரயிலுடன் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் 2 பெட்டிகள் முழுவதும் உருக்குலைந்தன. இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானோரில் பலர், மாணவர்கள் ஆவர். … Read more

நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த வளர்ப்பு நாய் உயிருடன் மீட்பு..!

துருக்கியில், நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே, 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஹட்டாய் மாகாணத்தில், அடுக்குஇடிபாடு குவியல்களிலிருந்து தாங்கள் வளர்த்த நாய் குரைக்கும் சத்தம் கேட்பதாக மீட்பு குழுவினரிடம் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளி வழியாக சென்ற மீட்புகுழுவினர், சைபீரியன் ஹஸ்கி இன நாயை பத்திரமாக மீட்டுவந்தனர். Source link

வணிக வளாகத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்தும்போது திடீர் வெடி விபத்தால் தூக்கி வீசப்பட்ட தீயணைப்பு வீரர்கள்.!

அமெரிக்காவில், வணிக வளாகத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்தும்போது திடீரென நேர்ந்த வெடி விபத்தால், தீயணைப்பு வீரர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். நியூயார்க் நகரிலுள்ள அந்த வணிக வளாகத்தில், தீயை அணைப்பதற்காக சில சுவர்கள் இடிக்கப்பட்டதால், கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. வணிக வளாகத்திற்குள் சிக்கிக்கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவரை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link

கிரீஸ் ரயில் விபத்து: ரயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்| Greece train crash: Public protest against train management

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: கிரீசில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழப்பிற்கு மோசமான ரயில் நிர்வாகம் காரணம் என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு கடந்த பிப்.,01ம் தேதி 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. … Read more

வியட்நாம் புதிய அதிபராக வோ வேன் தோங் போட்டியின்றி தேர்வு

வியட்நாமின் புதிய அதிபராக வோ வேன் தோங் (Vo Van Thuong) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் அதிபர் நுயென் சுவான் புக் (( Nguyen Xuan Phuc )) தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை கண்டுகொள்ளத் தவறிவிட்டார் என்ற புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார். இந்த நிலையில் தான் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வோ வேன் தோங் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 488 உறுப்பினர்களைக் கொண்ட அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 487 … Read more

தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா; கொந்தளிக்கும் சீனா.!

சீனாவின் அண்டை தீவு நாடான தைவானுக்கு, 619 மில்லியன் டாலர் மதிப்பில் நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவில் அரசப்படைகளுக்கும் பொதுவுடமைவாத கம்யூனிச படைகளுக்கும் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து போரில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிச படைகள் 1949ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றின. போரில் தோற்ற கோமின்டாங் என்று அழைக்கப்படும் தேசியவாத அரசாங்கம் தைவானுக்கு தப்பி ஓடி, அங்கு அரசமைத்தது. அந்த வகையில் சீனாவிடம் … Read more

காரில், 8 மணி நேரம் விட்டுச்செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. கவனக்குறைவாக செயல்பட்ட தந்தை கைது..!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், காரில் 8 மணி நேரம் தனியாக விட்டுச்செல்லப்பட்ட குழந்தை வெப்பம் தாளாமல் உயிரிழந்தது. ஷான் ரெளன்ஸ்வால் என்பவர் தனது 2 வயது குழந்தையை Day-care center-ல் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்று, கவனக்குறைவால், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை இறக்கிவிடாமல் பணிக்கு சென்றுவிட்டு, மாலை வழக்கம்போல் குழந்தையை அழைத்து செல்ல Day-care center வந்துள்ளார். அவர் குழந்தையை விடவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தபோது, குழந்தையை காரிலிருந்து இறக்கிவிட மறந்துபோனது தெரியவந்துள்ளது. வெளியே … Read more

மலேசியாவில் தொடர் கனமழை- வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்

மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஜோகூர் உட்பட 6 மாகாணங்களில் தேசிய மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 ஆறுகள் நிரம்பி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த நவம்பர் மாதம் பருவமழை தொடங்கிய … Read more

நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன: ஐ.நா

ஜெனிவா: நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா … Read more

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு வெடிபொருளுடன் வந்த நபர் கைது

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு சூட்கேஸில் வெடிபொருள்களுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். புளோரிடா மாகாணம் சான்போர்டுக்கு செல்ல வந்த 40 வயதான மார்க் மப்லி என்ற நபரின் சூட்கேசில், வெடி பொருள் இருப்பதை குறிப்பதற்கான சமிஞ்ஞை வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக பரிசோதித்ததில், வெடிக்க தயார் நிலையில் வெடிப் பொருள் (live explosive device) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு படையினரை சந்திக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியும், நைசாக அவர் நழுவிச் சென்றார். இருப்பினும் வீட்டில் அவர் … Read more