ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடம்: மகன் தகவல்

லண்டன்: ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூ கியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூ கி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தனது … Read more

இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

ஜெருசலேம், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அடுத்தக்கட்ட வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2-ம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25% கூடுதல் வரிக்கு ஆளாகியுள்ள இந்தியாவுக்கு இன்னுமொரு அடியாக அமையும். ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. … Read more

புற்றுநோய்க்கு தடுப்பூசி: சாதித்த ரஷியா- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது?

மாஸ்கோ: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அதாவது, ரஷியாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்ததாகும். ‘என்ட்ரோமிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடுப்பூசி … Read more

ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது. இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடி​யுரிமை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அவர்​களை கண்​டதும், சட்​ட​விரோத​மாக பணி​யாற்​றிய தென்​கொரிய தொழிலா​ளர்​கள் ஓடி மறைந்​தனர். அவர்​களை மடக்​கிய அமெரிக்க போலீ​ஸார் சுவர் ஓரமாக வரிசை​யாக … Read more

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். ‘டெஸ்லா’ என்ற நிறுவனத்தை தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறார். டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் உள்ள எலான் மஸ்க்குக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88.32 லட்சம் கோடி) சம்பளமாக தர அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சம்பளமாக வழங்கப்பட உள்ள இதனை பணமாக தராமல் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பங்குகளாக தரப்பட உள்ளன. இதன்மூலம் … Read more

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு மைதானத்தில் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதை பஜாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் … Read more

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா டிரோன்களை கொண்டு கடுமையான தாக்குதல்

கீவ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனினும், போர்நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரியது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி … Read more

வரிகள், தடைகளை விதித்து இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு பேச்சு

புதுடெல்லி: வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார். சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற எஸ்​சிஓ மாநாடு மற்​றும் ராணுவ பேரணி​யில் பங்​கேற்​றதற்​குப் பிறகு முதல்​முறை​யாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறிய​தாவது: வரி​கள் அதி​கரிப்​பு, வர்த்தக தடைகளை ஏற்​படுத்​து​வது போன்ற செயல்​களால் ஆசி​யா​வில் வலிமை வாய்ந்த பொருளா​தா​ரங்​களைக் கொண்ட நாடு​களான சீனா மற்​றும் இந்​தி​யாவை மிரட்டி … Read more

ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி: சந்தையில் அறிமுகம் எப்போது?

மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும். உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் … Read more