“டிக்‌ஷனரியில் கிட்டாத அர்த்தம் மிக்க சொற்கள்…” – இந்தியர்களின் உதவியால் துருக்கி தூதர் நெகிழ்ச்சி

அங்காரா: துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளாக 100 போர்வைகளை அனுப்பிவைத்த இந்தியர்கள் சிலருக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராத் சுனெல் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். துருக்கியின் காஜியன்டப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இதுவரை துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி துருக்கியை அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் உலுக்கின. அதிகாலை 4.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவிலும் மாலையில் 7.6 … Read more

மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா நம்பிக்கை| Modi can stop war on Ukraine if he wants: US desire

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more

“இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு” – ஈரான் தூதர்

புதுடெல்லி: இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார். ஈரானில் ஷா ராஜ்ஜியத்தை இஸ்லாமிய புரட்சி மூலம் வீழ்த்தியதன் 44-வது ஆண்டு விழா புதுடெல்லியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்துப் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி, ஈரானின் வளர்ச்சி குறித்தும், இந்திய – ஈரான் உறவு குறித்தும் எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது: ”சந்தேகமே இல்லாமல், ஈரானுக்கு மிகவும் முக்கியமான நாடு இந்தியா. ஈரான் அதிபர் ரைசி … Read more

ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய தடை – நேபாள அரசு அதிரடி!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாள தாவர தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம், தாவர நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி இந்தியா மற்றும் சீனா … Read more

சீனாவை சேர்ந்த 6 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா

சீன உளவு பலூன் அமெரிக்காவில் பறந்தது தொடர்பாக, சீனாவை சேர்ந்த 6 நிறுவனங்களை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. தங்கள் வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியநிலையில், தற்போது சீனாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை அமெரிக்கா பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க தொழில்நுட்பங்களை பெறுவதில் இருந்து துண்டிக்கப்படும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுவதாக தொழில்துறை … Read more

ஹெச்1பி விசாவில் புதிய நடவடிக்கை: இந்திய ஐ.டி., ஊழியர்களுக்கு பயன் | New Action on H1B Visa: Benefit for Indian IT Workers

வாஷிங்டன்- அமெரிக்கா, ‘ஹெச்1பி விசா’ நடைமுறையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரியளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினி மென்பொருள், தொழில்நுட்பம் உட்பட குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்1பி விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது. சிக்கல்கள் இந்த விசாவை, நம் நாட்டினரும், சீனர்களும் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், ஹெச்1பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் … Read more

Turkey earthquake: 90 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் குழந்தை!

நான்கு நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. கடுங்குளிரால் மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில்  இடிந்து விழுந்த கட்டிடத்தில் தனது தாயுடன் நான்கு நாட்கள் உயிர் பிழைத்த 10 நாள் பிறந்த குழந்தையினை மீட்பு பணியாற்றி … Read more

அந்தக் காட்சியைப் பதிவு செய்தபோது என் கண்கள் கலங்கின.. – துருக்கி புகைப்படக் கலைஞரின் துயர அனுபவம்

தனது 40 வருட புகைப்படத் தொழிலில் தான் எடுத்த பிற புகைப்படங்களுடன் இதனை ஒப்பிட முடியாது என்கிறார் துருக்கி புகைப்படக் கலைஞர் அல்தான். துருக்கி – சிரிய பூகம்பத்தின் கோர முகத்தை நாளும் வெளியாகும் புகைப்படங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன. அந்த வகையில் உலக மக்களின் மனதை உடைக்கும் புகைப்படத்தை எடுத்த தனது அனுபவத்தை பகிர்கிறார் அல்தான். ”துருக்கி -சிரிய எல்லையில் பூகம்பம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்காராவிலிருந்து தெற்கு துருக்கிக்கு விரைந்து சென்றேன். நான் சென்ற வழி … Read more

இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பார்சிலோனா மேயர்.. பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல் என புகார்

மாட்ரிட்: பார்சிலோனா நகருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை தற்காலிகமாக துண்டிப்பதாக பார்சிலோனா நகர மேயர் அடா கொலாவ் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் தொடர்ந்து திட்டமிட்டு மனித உரிமைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக அடா கொலாவ் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. சர்வதேச நகரான பார்சிலோனாவின் மேயராக இருப்பவர் இடதுசாரி தலைவரான அடா கொலாவ். பார்சிலோனாவுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் காஸா நகரங்களுடன் கடந்த 25 வருடங்களாக பல்வேறு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது … Read more

வீடுகளை இழந்த 53 லட்சம் பேர்.. சிரியாவில் சோகம்..!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்குப் பின் ஆறு நாட்களில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறைய வைக்கும் பனியில், கடும் குளிரில் தங்க இடமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். துருக்கியின் ஹாத்தே நகரில் நடத்தப்பட் மீட்புப் பணியில் கடந்த 5 நாட்களாக உணவு, நீர் இன்றி உயிருக்குப் போராடிய பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 108 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர் … Read more