ஜூஸ் கேட்ட கஸ்டமருக்கு… சப்ளையர் என்ன கொடுத்தார் தெரியுமா? – மருத்துவமனையில் 7 பேர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கடந்த ஜன. 16ஆம் தேதி வூகாங் என்ற பெண்மணி அவரின் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். உணவகத்தில் அவர்கள் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த உணவகத்தின் பணியாளர் அவர்களுக்கு பாட்டிலில் ஒரு ஜூஸை கொண்டு வந்துள்ளார்.  அனைவரும் அதை குடித்த ஓரளவுக்கு குடித்த பின், அவர்களுக்கு ஏதோ அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த 7 பேருக்கும் வயிற்றில் … Read more

செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்கள் சுழலும் போது ஒலி ஏற்படுவதை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்கள் சுழலும் போது ஒலி ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கிரகங்களில் வெளியாகும் ரேடியோ உமிழ்வுகளை ஒலி அலைகளாக மாற்றி அமைத்தனர். அப்போது புதன் கிரகத்தில் நீண்ட காற்று வீசுவது போலவும், வெள்ளி கிரகத்தில் இரும்பை இழைப்பது போன்றும், செவ்வாயில் ஊளைக் காற்று வீசுவது போன்றும் அவ்வப்போது இடி விழுவது போலவும் ஒலி ஏற்பட்டிருந்தது. வியாழன் கிரகம் நீண்ட பேரிரைச்சல் போன்றும், சனி கிரகம், விமானம் இறங்கும் … Read more

பாகிஸ்தான் பணம் கடும் வீழ்ச்சி ஒரு டாலர் 262 ரூபாய்… | Pakistan currency falls sharply to 262 rupees per dollar…

லாகூர் : டாலருக்கு நிகரான பாகிஸ்தான் பணம் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தானில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அரசின் இலவச கோதுமை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் வாகன இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க அரபு நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எப்., உள்பட பல இடுங்களில் கடன் பெற அரசு முயன்று வருகிறது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையால் அமெரிக்க டாலருக்கு … Read more

பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் சாவு; தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷவாயு காரணமா?

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகரும், அந்த நாட்டின் மிகப்பெரிய நகருமான கராச்சியில் கெமாரி என்கிற கிராமம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகினர். இப்படி மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையில் 18 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள் ஆவர். அதே … Read more

கொரோனா மரணங்களை மறைக்க மருத்துவர்களை கட்டாயப்படுத்தும் சீன அரசு?

சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான குரல்கள் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனாவால் மரணம் ஏற்பட்டாலும், இறப்புக்கான காரணம் நிமோனியா, இதய நோய் பாதிப்புகள் என்றே குறிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே, 5 ஆயிரம் பேர் மட்டுமே பலியானதாக கூறி வந்த சீன அரசு, … Read more

ஜெருசலேம் வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி | Shooting at Jerusalem place of worship: 7 dead

ஜெருசலேம்,-இஸ்ரேலில், மத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடான இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெருசலேமின் நேவி யாகவ் பகுதியில், யூதர்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு கூடிய ஏராளமான யூதர்கள், வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், இயந்திர துப்பாக்கியால் யூதர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு … Read more

போலீசார் தாக்கியதில் கறுப்பின இளைஞர் பலி: அதிபர் ஜோபைடன் வேதனை| Black youth killed in police attack: President Joe Biden saddened

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த கறுப்பின இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மெபிஸ் நகரில் கடந்த 07ம் தேதி அதிக வேகமாக கார் செல்வதை பார்த்த அங்கு ரோந்து போலீசார் காரை விரட்டிச்சென்று தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரில் டயர் நிக்கோலஸ் என்ற கறுப்பின இளைஞர் உள்பட 5 பேர் இருந்தனர். காரில் இருந்து டயர் நிக்கோலஸ் இறங்கியதும், போலீசார் அவரை மிகவும் கொடூரமாக … Read more

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்தவரை கடுமையாக தாக்கிய 5 போலீசார்..

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், போலீசார் கடுமையாக தாக்கியதில், கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. கடந்த 7 ஆம் தேதி, மெம்பிஸ் நகரில், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக கூறி டயர் நிக்கோலஸ் என்பவரை, 5 போலீசார் கடுமையாக தாக்கினர். படுகாயமடைந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கருப்பினத்தை சேர்ந்த 5 பேர் மீதும் மோசமான தாக்குதல், தவறான நடத்தை … Read more

சீனாவின் சவால்களை முறியடிக்க இந்தியா…தயாராகிறது!: புது அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக தகவல்| India is preparing to overcome Chinas challenges!: New nuclear weapons are reportedly being prepared

புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா தன் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நம் நாடு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. நீண்டகாலமாக பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், பாகிஸ்தானால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், ௨௦௨௦ல் மற்றொரு அண்டை நாடான சீனா, கிழக்கு லடாக் எல்லையில் தன் படைகளை குவித்தது. … Read more