கருப்பின பெண்ணை அவரது வீட்டில் சுட்டுக் கொலை செய்த வழக்கு.. முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை!

கருப்பின பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில், டெக்சாஸ் முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜெபர்சன் என்ற கருப்பின பெண் தனது வீட்டில் உறவுக்கார சிறுவனுடன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் திருடன் புகுந்துவிட்டதாக எண்ணி பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் படி, அங்கு சென்ற காவலர் ஆரோன் டீன், வீட்டின் பின்பக்கமாக நின்றிருந்துள்ளார். அப்போது, வெளியே ஏதோ … Read more

தாய்நாட்டில் திரண்ட ரசிகர்கள்: அர்ஜெண்டினா அணியினரின் வெற்றிப் பேரணியில் தவிர்க்கப்பட்ட விபத்து

பியூனஸ் அயர்சில்: 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மிகுதியான கூட்டத்தால் வீரர்கள் சென்ற பேருந்து விபத்துகளில் இருந்து நல்வாய்ப்பாக தப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. … Read more

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் எலுமிச்சை பழத்திற்கான தேவை அதிகரிப்பு..!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் இயற்கை மருந்துகளை நாடுவதால் எலுமிச்சை பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி சீனாவில் எலுமிச்சை வணிகம் திடீரென அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சை பழத்திற்கான விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவரை பல நன்மைகள் இருப்பதால் மக்கள் அதிகளவில் எலுமிச்சை பழத்தை வாங்கி வருகின்றனர். ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட மற்ற பழங்களின் … Read more

சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும்: இந்தியா

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு மதிப்பிழக்கும் என எச்சரித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு அவையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை. சர்வதேச அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக வீட்டோ அதிகாரத்தைப் பெற பல்வேறு நாடுகள் … Read more

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி: பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கு கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தின் ஆழம் 16 கிமீ ஆகும். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 … Read more

முட்டாளை கண்டறிந்த பின் பதவி விலகல்: எலான் மஸ்க் தகவல்!

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேலாக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், தான் பதவி விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை ட்விட்டரில் நடத்தினார். அதன் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். எலான் மஸ்க் நடத்திய ட்விட்டர் வாக்கெடுப்பில் 17,502,391 பேர் வாக்களித்துள்ளனர். எலான் மஸ்க் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது என்பது வாக்கெடுப்பு முடிவில் தெரியவந்துள்ளது. … Read more

ரஷ்யா – உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி..!

மேற்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயின் ஒருபகுதி வெடித்து சிதறியதில், மூன்று பேர் உயிரிழந்தனர். சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு ஏதும் இல்லையென்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

ராஜினாமா செய்கிறேன்; ஒரு முட்டாளை தேடிப்பிடிப்பேன் – எலான் மஸ்க்

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்விட்டர் சிஇஓ பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு ராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்” என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு 2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் … Read more

ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் பிறகு சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்ஸ் குழுக்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா என எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 … Read more

சீன கரோனா நிலவரம் | அண்மைத் தகவல் ஐந்து

பீஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 3,101 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதற்கு முந்தைய நாளில் 2,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் படி, நேற்று புதிதாக கரோனா பலி ஏதும் பதிவாகவில்லை. திங்கள்கிழமையன்று 5 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். தலைநகர் பீஜிங்கில் மட்டும் கடந்த 2 நாட்களில் 7 … Read more