கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு தாய் – தந்தை நலனுக்காக கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

லண்டன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் எம்மி என்ற 8 வயது சிறுமி எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறுவர்கள் எழுதும் கடிதம் அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் தொடங்கி பலவற்றையும் கேட்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் சில தன்னலமில்லாத வகையிலும் உள்ளது. அந்த வகையில் எம்மி எழுதியுள்ள கடிதமும் இடம்பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Read more

செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்

பெர்லின்: பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் … Read more

முன்னாள் அதிபரை விடுவிக்கக்கோரி போராட்டங்கள் தீவிரம்.. பெருவில் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

பெருவில், முன்னாள் அதிபர் காஸ்டிலோவை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,  நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  கிளர்ச்சி மற்றும் சதி செய்ததாக, பெட்ரோ காஸ்டிலோவிற்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கக்கோரிய வழக்கில், விசாரணையை, பெரு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.  இதனைதொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.   Source … Read more

உலகக்கோப்பை கால்பந்தில் மொராக்கோவை வீழ்த்தியது பிரான்ஸ்.. பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது..!

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் வெடிக்கக்கூடும் எனக்கருதி, முன்கூட்டியே தலைநகர் பாரிஸில் 5 ஆயிரம் போலீசாரும், பிற பகுதிகளில் 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும், பல்வேறு நகரங்களில் மொராக்கோ ரசிகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டதாக 120 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். Source link

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்கேரியாவில் நேட்டோ படைகளின் தற்காப்பு பயிற்சி

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்கேரியாவில் நடைபெற்ற நேட்டோ படைகளின் ராணுவ பயிற்சியை இத்தாலிய படைகள் முன் நின்று நடத்தின. இதில் இத்தாலியின் தரைப்படைக்கான போர் வாகனங்கள் இடம்பெற்றதுடன், அல்பேனியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் அமெரிக்க படையினர் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்கேரியாவில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஹங்கேரி, ருமேனியா,மற்றும் சுலோவோக்கியா, நாடுகளிலும் நேட்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன … Read more

ஐ.நா.வின் பெண்கள் அமைப்பில் இருந்து ஈரான் அதிரடி நீக்கம்

நியூயார்க்: அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரானை நீக்கும் புதிய தீர்மானத்தை அமெரிக்கா புதன்கிழமை கொண்டு வந்தது. தீர்மானத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈரான் ஈடுபட்டது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்தன. 16 … Read more

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம்: நிரவ் மோடி கோரிக்கை நிராகரிப்பு!

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும்படி வைர வியாபாரி நிரவ் மோடி வைத்த கோரிக்கையை, லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்ட விரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை … Read more

தோல்வியில் அழுத மொராக்கோ வீரருக்கு பிரான்ஸ் வீரர் ஆறுதல்

உலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் தோல்வியடைந்த மொராக்கோ அணியின் வீரர் ஹகிமி கதறி அழுத போது அவரை பிரான்ஸ் வீரர் Kylian Mbappe  கட்டி தழுவி ஆறுதல் கூறியதுடன் நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள் ஹகிமி என ட்வீட் செய்துள்ளார். கத்தாரின் AL Bayt மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. தோல்வியை தாங்க முடியாத மொராக்கோவின் நட்சத்திர வீரர் அகிராஃப் ஹகிமி கண் கலங்கினார். … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை – ரஷ்யா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக, ரஷ்யா-உக்ரைன் போர் பார்க்கப்படுகிறது. போர் தொடங்கி 10 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, கிறிஸ்துமஸுக்குள் ரஷ்யா படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை என, ரஷ்ய அதிபர் அலுவலக … Read more

'கொரோனா.. இனிமே அதுக்கு அவசியம் இல்லை' – WHO நம்பிக்கை!

“2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருத வேண்டிய அவசியம் இருக்காது,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான, சீனாவின் வூகான் மாகாணத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், கனடா உட்பட உலக … Read more