நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்தின் சிறிய ரக போர்க்கப்பல்.. 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரம்

தாய்லாந்து வளைகுடா கடற்பகுதியில், சிறிய ரக போர் கப்பல் ஒன்று நள்ளிரவு மூழ்கிய நிலையில், அதிலிருந்த 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. சக்திவாய்ந்த கடல் அலையால், HTMS Sukhothai போர் கப்பலின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்தது. இதனால், கப்பல் ஒருபுறமாக சாய்ந்த நிலையில், அதிலிருந்த 106 பேரில் 73 பேரை பாதுகாப்பாக மீட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 33 பேரை தேடும் பணியில் மூன்று கடற்படை கப்பல்களும், … Read more

கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்த அர்ஜென்டினா ரசிகர்கள்

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் முறையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பியூனஸ் அயர்ஸில் உள்ள நினைவு ஸ்தூபி அருகே திரண்ட ஏராளமான அர்ஜென்டினா ரசிகர்கள், அந்நாட்டு தேசியக் கொடியை ஏந்தி கொண்டாடினர். Source link

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா?- எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிதாக ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார் அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவையா என்று எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பு தான் அவரை இதுவரை இட்டுவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் இந்த கருத்துக் கணிப்பு உயிர்ப்புடன் இருக்கும். இந்த செய்தியை பதிவு செய்த … Read more

கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணையை ஏவிய வடகொரியா.. ஜப்பான்-கொரிய தீபகற்ப கடல் எல்லையில் ஏவுகணை விழுந்ததாக தகவல்..!

வடகொரியா, தனது கிழக்கு கடற்கரையோர கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக, ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக தென்கொரிய கூட்டுப்படைத்தலைவர் தெரிவித்த நிலையில், அதனை ஜப்பான் பிரதமர் அலுலகம் உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியா, அதன் புதிய ஆயுதத்திற்கான அதிக சக்தியுடைய திட – திரவ மோட்டாரை சோதித்ததாக கூறிய சில தினங்களில், ஏவுகணையை ஏவியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான ஏவுகணை ஏவப்பட்டதையடுத்து, உஷார் நிலையில் இருக்க ஜப்பான் பிரதமர் Fumio Kishida அறிவுறுத்தியுள்ளார். Source … Read more

உக்ரைன் நகரம் மீது ரஷ்ய படைகள் பொழிந்த ஏவுகணை மழை..!

உக்ரைனின் பாக்முட் நகரம் மீது ரஷ்ய படைகள் பொழிந்த ஏவுகணை மழையால், ஏராளமான கட்டங்கள் தீப்பற்றி எரிந்து, அந்நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள டோனட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Luhansk) பிராந்தியங்களை இணைப்பதுடன், உக்ரைனின் பல்வேறு மாகாணங்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்த முடியும் என்பதால் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் மாதக்கணக்கில் போராடிவருகின்றன. இருந்தபோதும், உக்ரைன் ராணுவம் பெரியளவில் பின்வாங்காமல் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றன. Source link

பலி 24 ஆக உயர்வு| Dinamalar

கோலாலம்பூர் : மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள படாங்கலி என்ற பகுதி சுற்றுலாத் தலமாக உள்ளது. இது மலையை ஒட்டிய பகுதி என்பதாலும் இயற்கை விவசாய பண்ணை உள்ளதாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணியரின் பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. இங்குள்ள இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணியர் கூடாரங்கள் அமைத்து இப்பகுதியில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நவ.23ம் … Read more

FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்

France Vs Argentina: கால்பந்தாட்டத்தின் மன்னனாக அர்ஜென்டினா உருவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு, பிரான்சில் கலவரம் வெடித்தது.   ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண பிரான்சின் பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்கள் … Read more

சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் – எரிவாயு வயலில் தீ விபத்து

ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவுக்கு தீ பிடித்து எரிந்து வருகிறது. தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

இந்திய வம்சாவளி பெண் உடல் கருகி பரிதாப பலி| Dinamalar

நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில், நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில், டிக்ஸ் ஹில்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர், இந்திய வம்சாவளி பெண்ணான தன்யா பதிஜா, ௩௨. எம்.பி.ஏ., பட்டப் படிப்பு முடித்து தொழில்முனைவோராக இருந்த இவர், சமீபத்தில் அப்பகுதியில் கேக் கடை திறந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் தன் வீட்டில் இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு … Read more

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா?- எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிதாக ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார் அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவையா என்று எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பு தான் அவரை இதுவரை இட்டுவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் இந்த கருத்துக் கணிப்பு உயிர்ப்புடன் இருக்கும். இந்த செய்தியை பதிவு செய்த … Read more