உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியால் சோர்வடைந்த வீரர்களுக்கு ஊக்கமளித்த பிரான்ஸ் அதிபர் – வைரலாகும் வீடியோ..!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி வீரர்களை ஊக்கமூட்டும் வகையில், அந்நாட்டு அதிபர் மேக்ரான் பேசிய வீடியோ, இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி கோப்பை வெல்லும் வாய்ப்பை பிரான்ஸ் அணி தவறவிட்டது. இந்நிலையில், போட்டியை மைதானத்தில் கண்டுரசித்த அதிபர் மேக்ரான், ஆட்டம் முடிந்தபின் சோர்வடைந்திருந்த அணி வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், வீரர்களின் அறைக்கு சென்ற அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக, அவர்களிடம் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி குறித்து நேற்று கூகுளில் அதிகம் பேர் தேடல் – சுந்தர் பிச்சை வியப்பு..!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக நேற்று கூகுளில் தேடப்பட்டதைப்போல், கடந்த 25 ஆண்டுகளில் வேறெதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கவனமும் கால்பந்து இறுதிப்போட்டியின் மீதிருந்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், இந்தாண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில், கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. Source link

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி குறித்து நேற்று கூகுளில் அதிகம் பேர் தேடல் – சுந்தர் பிச்சை வியப்பு..!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக நேற்று கூகுளில் தேடப்பட்டதைப்போல், கடந்த 25 ஆண்டுகளில் வேறெதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் ஒட்டுமொத்த கவனமும் கால்பந்து இறுதிப்போட்டியின் மீதிருந்ததாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில், இந்தாண்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில், கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தில் உள்ளது. Source link

கத்தார் தேசிய தினம் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு சாகசம் நிகழ்த்திய விமானப்படை விமானங்கள்

கத்தார் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையிலும் கத்தார் விமானப்படை விமானங்கள் வர்ண புகைகளை கக்கியவாறு வானில் சாகசம் நிகழ்த்தியது. கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தின் மீது கத்தார் நாட்டின் தேசியகொடியின் நிறங்களான சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். Source link

நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்தின் சிறிய ரக போர்க்கப்பல்.. 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரம்

தாய்லாந்து வளைகுடா கடற்பகுதியில், சிறிய ரக போர் கப்பல் ஒன்று நள்ளிரவு மூழ்கிய நிலையில், அதிலிருந்த 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. சக்திவாய்ந்த கடல் அலையால், HTMS Sukhothai போர் கப்பலின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்தது. இதனால், கப்பல் ஒருபுறமாக சாய்ந்த நிலையில், அதிலிருந்த 106 பேரில் 73 பேரை பாதுகாப்பாக மீட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 33 பேரை தேடும் பணியில் மூன்று கடற்படை கப்பல்களும், … Read more

கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்த அர்ஜென்டினா ரசிகர்கள்

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் முறையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பியூனஸ் அயர்ஸில் உள்ள நினைவு ஸ்தூபி அருகே திரண்ட ஏராளமான அர்ஜென்டினா ரசிகர்கள், அந்நாட்டு தேசியக் கொடியை ஏந்தி கொண்டாடினர். Source link

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா?- எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு

நான் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிதாக ஒரு கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார் அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்து சுதந்திரம் தேவையா என்று எலான் மஸ்க் நடத்திய கருத்துக் கணிப்பு தான் அவரை இதுவரை இட்டுவந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமா? என்று புதிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரங்கள் இந்த கருத்துக் கணிப்பு உயிர்ப்புடன் இருக்கும். இந்த செய்தியை பதிவு செய்த … Read more

கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணையை ஏவிய வடகொரியா.. ஜப்பான்-கொரிய தீபகற்ப கடல் எல்லையில் ஏவுகணை விழுந்ததாக தகவல்..!

வடகொரியா, தனது கிழக்கு கடற்கரையோர கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக, ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக தென்கொரிய கூட்டுப்படைத்தலைவர் தெரிவித்த நிலையில், அதனை ஜப்பான் பிரதமர் அலுலகம் உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியா, அதன் புதிய ஆயுதத்திற்கான அதிக சக்தியுடைய திட – திரவ மோட்டாரை சோதித்ததாக கூறிய சில தினங்களில், ஏவுகணையை ஏவியுள்ளது. சந்தேகத்திற்கு இடமான ஏவுகணை ஏவப்பட்டதையடுத்து, உஷார் நிலையில் இருக்க ஜப்பான் பிரதமர் Fumio Kishida அறிவுறுத்தியுள்ளார். Source … Read more

உக்ரைன் நகரம் மீது ரஷ்ய படைகள் பொழிந்த ஏவுகணை மழை..!

உக்ரைனின் பாக்முட் நகரம் மீது ரஷ்ய படைகள் பொழிந்த ஏவுகணை மழையால், ஏராளமான கட்டங்கள் தீப்பற்றி எரிந்து, அந்நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள டோனட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Luhansk) பிராந்தியங்களை இணைப்பதுடன், உக்ரைனின் பல்வேறு மாகாணங்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்த முடியும் என்பதால் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் மாதக்கணக்கில் போராடிவருகின்றன. இருந்தபோதும், உக்ரைன் ராணுவம் பெரியளவில் பின்வாங்காமல் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றன. Source link

பலி 24 ஆக உயர்வு| Dinamalar

கோலாலம்பூர் : மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள படாங்கலி என்ற பகுதி சுற்றுலாத் தலமாக உள்ளது. இது மலையை ஒட்டிய பகுதி என்பதாலும் இயற்கை விவசாய பண்ணை உள்ளதாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணியரின் பொழுதுபோக்கு தலமாக விளங்குகிறது. இங்குள்ள இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணியர் கூடாரங்கள் அமைத்து இப்பகுதியில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நவ.23ம் … Read more