2வது டி-20 கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்| Dinamalar

மவுன்ட் மவுன்கனுயு: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சிராஜ் மற்றும் சகால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மவுன்ட் மவுன்கனுயு: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது 2022-ம் ஆண்டு வாகனக் கண்காட்சி..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் புகழ்பெற்ற வாகனக் கண்காட்சி தொடங்கியது. கன்வென்ஷன் சென்டரில் தொடங்கிய நடப்பாண்டிற்கான வாகனக் கண்காட்சியில், 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் புதிய மாடல் வாகனங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. வருகின்ற 27-ம் வரை நடைபெறும் வாகனக் கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான கார் ஆர்வலர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1907-ம் ஆண்டு முதல் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் வாகனக் கண்காட்சி, உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வாகனக் கண்காட்சியில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. Source link

ஏழை நாடுகளுக்கு நிதியளிக்க வளர்ந்த நாடுகள் ஒப்புதல்| Dinamalar

கெய்ரோ: எகிப்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடக்கும் மாநாட்டில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி அளிக்க வளர்ந்த நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன. ஐ.நா., பருவநிலை மாற்ற தீர்மானத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27 வது மாநாடு எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நவ.,6 முதல் நடந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் போது, உலக வெப்பமயமாதலுக்கு … Read more

டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கின் தடை நீக்கம்: எலான் மஸ்க் அறிவிப்பு| Dinamalar

வாஷிங்டன்: டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் தடையை நீக்கி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் குறித்து தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவு செய்து வந்தார். இதனையடுத்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த … Read more

10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக நடக்கும் செம்மறி ஆடுகள்!

வடக்கு சீனாவில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காரணங்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவிக்கவில்லை. கால்நடை மருத்துவர்களும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், செம்மறி ஆடுகளின் இந்த வித்தியாசமான நடவடிக்கைக்கு, வட்ட வடிவில் நடக்கும் நோய் தாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. “வட்டமிடும் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள், நிலையான பொருட்கள் மீது சாய்ந்து கொள்ளும், மூலைகளை நோக்கி செல்லும் அல்லது பாதிக்கப்பட்ட பக்கத்தை … Read more

ரஷ்யாவில் 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… 9 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். பசிபிக் தீவான சகலின் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சரிந்து விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். Source link

இந்தியாவின் எதிர்காலம் முன்பைவிட பிரகாசம் – அமெரிக்க எம்.பி. புகழாரம்

வாஷிங்டன்: இந்தியாவின் எதிர்காலம் முன்பை விட பிரகாசமாக உள்ளதாக அமெரிக்க எம்.பி. ஜான் கார்ட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலும் பேசியதாவது: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சுயராஜ்யத்துக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு கடந்த தசாப்தங்களில் அசைக்க முடியாதது. அதனால் இந்தியாவின் எதிர்காலம் இன்று முன்பை விட பிரகாசமாக உள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட வலிமையான தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பை இந்திய … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் அமைப்பாக இந்த கவுன்சில் உள்ளது. இதில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயன்று வருகிறது. இதற்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா.வுக்கான பிரான்ஸ் துணை பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: ஐ.நா. பாதுகாப்பு … Read more

ட்விட்டரில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ட்விட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் … Read more

சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு உணவு டெலிவரி செய்த சென்னை பெண்

சிங்கப்பூர்: சென்னையைச் சேர்ந்த மானசா கோபால் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவில் உள்ள வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நான்கு கண்டங்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து அவர் உணவு டெலிவரி செய்துள்ளார். இது உணவு டெலிவரிக்காக மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக நீண்ட பயணம் ஆகும். தன்னுடைய பயணத்தை வீடியோவாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கையில் உணவுப் பையுடன் சிங்கப்பூரிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறார் மானசா கோபால். … Read more