சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை; 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

பீஜிங், சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை … Read more

கோவிலில் தாக்குதல்; வங்கதேசத்தில் கலவரம்| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நரைல் மாவட்டம் சஹபரா என்ற கிராமத்தில் வசித்த ஒரு இளைஞர், சமூக வலைதளத்தில் மத உணர்வை துாண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார். இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அந்தக் கிராமத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், … Read more

பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால், நகரங்களில் வெள்ளம் ஏற்படும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தது என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை … Read more

இலங்கையில் மீண்டும் அவரச நிலை: பிரகடனம் செய்தார் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் மீண்டும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (2022, ஜூலை 17) பிற்பகுதியில் இந்த அறிவிப்பு வெளியானது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், மக்களின் அடிப்படைத் தேவையான மருந்துகள், எரிபொருள், உணவு என அத்தியாவசியப் பொருட்கள் முதல் அனைத்துமே விலை அதிகரித்தது. போராட்டங்கள், ஆட்சி மாற்றம், வன்முறை என அண்மை நாட்களாக சிக்கலின் உச்சியில் இருக்கும் இலங்கையின் … Read more

அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; மர்மநபர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இண்டியானா நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். இண்டியானா மாகாண ஆளுநர் கூறுகையில் கிரென்வுட் பார்க் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் அண்டுக்கு 40,000 மரணங்கள் துப்பாக்கிச் சூடு போன்ற மரணங்களால் நிகழ்கின்றன. அண்மைக்காலமாக … Read more

பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே மோதல்.. ஊரடங்கை மீறி நடந்த சண்டையில் 65 பேர் படுகொலை..!

வட ஆப்பிரிக்கா நாடான சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர். ப்ளூ நைல் மாகாணத்தில் Hausa மற்றும் பிரிடா பிரிவு பழங்குடியின மக்களிடையே சண்டை மூண்டதாக கூறப்படுகிறது. இரவு ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதும் இரு பிரிவு மக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் … Read more

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பால் உணவு, எரிபொருள் விலை உயர்வு.. குறைந்த வருமானம் பெறுவோர் உணவை வாங்க முடியாமல் சிரமம்..!

கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவை வாங்க முடியாமல் சிரமப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்திற்கு ரஷ்யா-உக்ரைன் மோதலே காரணம் என கனடா தெரிவித்துள்ளது. Source link

12 பேர் பரிதாப பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். சீனாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் கடந்த வாரம் வரை 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால், தென்மேற்கு மற்றும் வடமேற்கு சீனாவில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து … Read more