ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வெற்றி: 'அறநெறி போலீஸ்' பிரிவை கலைத்த ஈரான்

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறநெறி போலீஸ் பிரிவு ஈரானில் மக்கள் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு … Read more

சீனாவுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும்: இலங்கை எம்.பி எச்சரிக்கை

கொழும்பு, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன். இக்கட்டான … Read more

இஸ்ரேலின் மொசாட்டிற்கு உளவுபார்த்ததாக 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

தெஹ்ரான், இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக ஈரான் அங்கீகரிக்கவில்லை. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்களிலும் ஈரான் ஈடுபட்டு வருகிறது. சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரான் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை … Read more

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை; ஈரான் அதிரடி.!

உலகின் நம்பர் ஒன் உளவுத்துறையாக இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. ஈரானில் மக்கள் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டு போருக்கு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டணிதான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. 1979ம் ஆண்டு முதல் ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டமானது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலால் நடைபெற்று வருகிறது என்பது ஈரானின் வாதம். அந்தவகையில் … Read more

சீனாவில் உற்பத்தியை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஜெங்ஜூ நகரில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலையை தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம் அமைத்துள்ளது. ஐபோன் புரோ மாடல்களில் 85 சதவீதம் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மொபைல்போன் அதிகம் தேவைப்படும் நேரத்தில் … Read more

கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மத்தியில் சீனாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

ஹாங்காங், கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால், கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி … Read more

தகாத உறவு, லிவிங் டூகெதர் கலாசாரத்தை ஒழிக்க வருகிறது புதிய சட்டம்!

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டிற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு திருமண உறவை தாண்டிய உடலுறவு, பாலியல் வன்கொடுமைகள், லிவ்விங் டூகேதர், கே, லெஸ்பியன் என இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை அறிந்து ஆட்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபோன்ற சமூக அவலங்களை களையும் நோக்கில், 2019 ஆம் ஆண்டு திருமண உறவைத் தாண்டிய உடலுறவுக்கு தடை விதிக்கும் சட்டம் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்தது. … Read more

ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

தெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று(டிச.,04) தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு இன்று ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. மிதமுள்ள 3 பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை … Read more

எனது நண்பர் நரேந்திர மோடி.. அமைதியை ஏற்படுத்திட எங்களை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் டுவீட்

பாரிஸ், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும். இந்நிலையில், … Read more

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் எதிரொலி: கலாச்சார கண்காணிப்பு காவல் பிரிவை தடை செய்தது ஈரான்

தெஹ்ரான்: கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஓர் அறப் போராட்டம் என்ன செய்யும் என்பதற்கு விளக்கமாகி நிற்கின்றனர் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் . ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அட்டர்னி … Read more