மாலத்தீவில் தீ விபத்து: தமிழர்கள் உள்பட 10 பேர் பலி

மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேயில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று (நவ.,10) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் தீ விபத்தில் சிக்கினர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛தீ விபத்தில் 10 பேர் … Read more

உக்ரைன் போரில் திருப்பம் | ரஷ்யப் படைகளை திருப்பி அழைத்த பாதுகாப்பு அமைச்சர்

கீவ்: உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட … Read more

6 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா| Dinamalar

சிங்கப்பூர்: ‘ஏர் இந்தியா’ நிறுவனம், ‘சீனா டெவலப்மென்ட் பேங்க் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, 6 விமானங்களை, குத்தகைக்கு வாங்கியுள்ளது. ‘டாடா’ குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 6 ‘ஏர்பஸ் ஏ320’ விமானங்களை, சி.டி.பி., ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெற்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், அதன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்த ஏர்பஸ் விமானங்களை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விமானங்கள், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, … Read more

இந்தியா வெல்லுமா… பைனலுக்கு செல்லுமா? இங்கிலாந்துடன் இன்று செமி பைனல்| Dinamalar

அடிலெய்டு: ‘டி-20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இன்று இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி பைனலுக்கு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மீள்வாரா ரோகித் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் பங்கேற்ற இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது. பேட்டிங்கில் கேப்டன் … Read more

ரூ.13,500 கோடி கடன் மோசடி | நீரவ் மோடியை ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2018-ல் லண்டன் தப்பிச் சென்றார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நீரவ் மோடியை ஒப்படைக்கக் கோரி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சாம் கூஸ், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த பிப்ரவரி … Read more

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் வெப்ப அலைக்கு பலி

ஜெனீவா : 2100ல் வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலியாவர் என அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கிறது. ஐரோப்பிய சுற்று சூழல் கழக அறிக்கை: உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்படும். ஆண்டுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் என பதிவாகி வரும் சூழலில், இந்த … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்: டெல்லியில் அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தின் டோட்டி மாவட்டத் தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, மணிப்பூரிலும் உணரப்பட்டது. மத்திய நேபாளம் கூர்கா பகுதியில் கடந்த 2015-ம் … Read more

தெற்கு உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்| Dinamalar

கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டடங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சான் பிராந்தியத்திலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா தரப்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் … Read more

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் மிச்சிகன் மாகாணத்தில் முதல் முறையாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தானேதர் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுக்குப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். இது இடைக்கால தேர்தல் எனப்படுகிறது. அதன்படி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் (கீழவை) பெரும்பான்மைக்கு 218 உறுப்பினர்கள் தேவை. ஆனால் நேற்று மாலை வரை அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 178 உறுப்பினர்களும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 198 உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர். அதேபோல் 100 … Read more

அமெரிக்க துணை கவர்னராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகருக்கு அருகே அமைந்துள்ளது மேரிலாண்ட் மாகாணம். இதன் கவர்னர் மற்றும் துணை கவர்னர் பதவிக்கான தேர்தலில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கவர்னராக வெஸ் மூர், துணை கவர்னராக இந்திய வம்சாவளியான அருணா மில்லர், 58, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேரிலாண்டின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் … Read more