அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்தக கொள்​கை​யில் பரஸ்பர வரிவ​திப்பு முறை கொண்​டு​வரப்​பட்​டது. இந்த புதிய வர்த்தக கொள்​கையை ஏற்​கும்​படி ஐரோப்​பிய யூனியன், ஜப்​பான் மற்​றும் இதர நாடு​களை அதிபர் ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதன் காரண​மாக அமெரிக்​கா​வின் வரி வரு​வாய் கடந்த ஆகஸ்ட்​டில் 159 பில்​லியன் … Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, நேற்று ரிக்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 … Read more

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு பகு​தி​யில் இந்த ஆற்​றில் சுமார் 90 பேருடன் ஒரு படகு சென்று கொண்​டிருந்​தது. இந்​தப் படகு நேற்று காலை​யில் ஒரு மரத்​தின் அடிப்​பகு​தி​யில் மோதி கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 32 பேர் பேர் உயி​ரிழந்​தனர், 50-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர், 8 பேரை காண​வில்லை. நைஜீரி​யா​வின் தொலை​தூரப் பகு​தி​களில் மழைக்​காலங்​களில் … Read more

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: “இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இந்தியாவையம் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. (எனினும்) அவர்கள், ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடி, விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார். முன்னதாக, … Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!

காபூல்: கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் 2,200 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அருகில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்கப்​பட்​டது. வியாழக்கிழமை (செப்டம்பர் … Read more

ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: “ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஜி.யு.போப். 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார். தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார். ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார். ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, … Read more

இந்தியா உடனான நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்: ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்

வாஷிங்டன்: இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான 50% வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய – அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியா – சீனா உறவு கூடுதல் வலிமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான … Read more

காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம் தேதி எஸ்​சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்​டலுக்கு புறப்​பட்​டார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை​யும் அவர் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் ஹோட்​டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்​க​வில்​லை. சுமார் … Read more

ஐ.நா. பொது சபை கூட்டம்; பிரதமர் மோடி அமெரிக்க பயணம் ரத்தாகிறது?

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் இம்மாத இறுதியில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடை பெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரி விதிப்பினால் அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட்டார் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்… 2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு – டெல்லியில் நில அதிர்வு

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.