இந்தியை திணிப்பது இந்தி பேசாத மக்கள் மீதான போர்: புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் இன்று நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அழைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:‘‘மாநில மொழிகளை அழித்து இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக முடியும். … Read more

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்து | 40 தொழிலாளர்கள் பரிதாப பலி; பலர் படுகாயம்

அன்காரா: துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து துருக்கி எரிபொருள் அமைச்சர் ஃபாத்தியா டான்மெஸ் கூறும்போது, “வடக்கில் ஒரு சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 350 மீட்டர் தூரத்திற்கு பெரு வெடிப்பு கிளம்பியது. தீ விபத்து தொடர்ந்து தொழிலாளர்கள் திரளாக ஓடிச் சென்றனர். இந்த தீ விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து … Read more

உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்: ஜோ பைடன் சாடல்| Dinamalar

வாஷிங்டன்: உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரசார குழு கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து ஜோ பைடன் பேசியதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்: சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது.ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை … Read more

மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் – அமெரிக்க அதிபர் பைடன் பகீர்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்து வரும் சீனாவையும், ரஷ்யாவையும் திட்டித் தீர்த்த ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்தும் பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் … Read more

107 வது இடத்தில் இந்தியா| Dinamalar

புதுடில்லி: நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு(Global Hunger Index – GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியல் நேற்று … Read more

இந்திய பெண்கள் சாம்பியன் : ஆசிய கோப்பை கிரிக்கெட்டில்| Dinamalar

சில்ஹெட்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது. பைனலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார். வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 8வது சீசன் நடந்தது. சில்ஹெட் நகரில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. கேப்டன் சமாரி (6), அனுஷ்கா சஞ்சீவனி … Read more

இந்திய இளைஞருக்கு ஆஸி.,யில் கத்திக்குத்து| Dinamalar

சிட்னி : ஆஸ்திரேலியாவில் பணம் தர மறுத்த இந்திய இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்திய வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதசேம் மாநிலம் ஆக்ரா நகரை சேர்ந்தவர் சுபம் கார்க் 28. சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற இவர் மேற்படிப்புக்காக செப். 1ல் ஆஸ்திரேலியா வந்தார். இங்கு நியூ சவுத் வேல்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இரவு 10:30 மணிக்கு தெருவில் நடந்து சென்ற … Read more

சீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் பரவுவதை தடுக்க தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை!

பீஜிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்வாகும். நாளை தொடங்கும் 20ஆவது மாநாட்டில் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுக்க அதிபராக இருக்கும் சட்டத் திருத்தத்தை ஜி ஜின்பிங் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். இதை வலியுறுத்தி … Read more

உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷியா இந்த வாரம் 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை … Read more