இயற்பியலுக்கான நோபல் பரிசுமூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்டோக்ஹோம், இயற்பியல் துறையில், 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், ஆன்டன் ஸய்லிங்கர் ஆகியோருக்கு … Read more

அழிந்து வரும் 72 அரிய ரக திராட்சைகளை வளர்த்து வரும் விவசாயி..!

லெபனான் நாட்டு விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் 72 அரியவகை திராட்சை ரகங்களை பராமரித்து வருகிறார். திராட்சை தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற கஃபர்மிஷ்கி  மலைப்பகுதியில், 4 தலைமுறையாக திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் குடும்பத்தில் பிறந்த கமல் சைக்காளி  என்பவர் அழிந்து வரும் திராட்சை இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஒவ்வொரு ரகத்திற்கும் 3 கொடிகள் வீதம் 72 ரக திராட்சைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். Source link

பிரமாண்ட கோயில் துபாயில் இன்று திறப்பு| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று திறந்து வைக்கப்படுகிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது.இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு … Read more

தாய்லாந்து விமான நிலையத்தில் குலாப் ஜாமூன் விருந்தளித்த இந்தியர்| Dinamalar

பாங்காக் :தாய்லாந்து சென்ற இந்திய பயணி குலாப் ஜாமூன் எடுத்து செல்ல விமான நிலைய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அதை அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் வினியோகித்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் என்ற பயணி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவுக்கு விமானம் வாயிலாக சென்றார். விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது, அவரது கைப்பையில் இருந்த, ‘டின்’ குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ‘இது … Read more

கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மெர்சிட் கவுண்டியில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் 36 வயதான ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி ஆகியோருடன் 39 வயதான அமந்தீப் சிங் என்பவரும் கடத்தப்பட்டுள்ளனர் என்று மெர்சிட் கவுண்டி காவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் … Read more

2022 இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய … Read more

வம்புக்கு இழுக்கும் வடகொரியா?; பதிலடிக்கு தயார் ஆகும் ஜப்பான்!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் தற்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் கடற்பகுதியின் மீது கடந்த அக்டோபர் 1ம் தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவி வட கொரியா சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா … Read more

அதிர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம்; 2024 முதல் அனைத்திலும் USB-C சார்ஜர் மட்டுமே!

ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம், ஒரு முக்கிய மைல்கல்லாக, எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் தொடர்பாக புதிய விதிகளை அங்கீகரித்துள்ளது. இந்த புதிய விதிகள் 2024 க்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் போன்ற மின்னணு கேஜெட்டுகளுக்கு, உலகளாவிய சார்ஜிங் போர்ட் அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்த விதிகளுக்கு எதிராக 13 வாக்குகளும், ஆதரவாக 602 வாக்குகள் கிடைத்துள்ளது. இ-ரீடர்கள், இயர்பட்கள் மற்றும் பிற மின்னணு கேஜெட்டுகளும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருப்பதற்கு இந்த விதி வழி வகுக்கிறது. … Read more

Nobel Prize 2022: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்று விஞ்ஞானிகள்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து … Read more

வடகொரியா ஏவுகணை வீச்சு: ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை கொண்டு தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏவுகணை வீச்சை தொடர்ந்து, ஜப்பான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு … Read more