மெண்டவாய் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்த மக்கள்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் ((Mentawai )) தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மெண்டவாய் தீவுகளில் 6.1 என்ற ரிக்டர் அளவிலும், 5.3 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், மரக்கட்டை விழுந்து ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Source link

70 லட்சம் இந்தியர்கள் மீட்பு: ஜெய்சங்கர் பெருமிதம்| Dinamalar

ரியாத்: கோவிட் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டு வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சவுதி அரேபியா சென்றுள்ள ஜெய்சங்கர், ரியாத் நகரில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடியாடினார். அப்போது அவர் பேசியதாவது: வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். இது போன்று யாரும் செய்தது கிடையாது. கோவிட் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மீட்பு பணி இதுவாகும். இதனால் தான் … Read more

மோசமான வானிலை: அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் தப்பித்த இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து அவர் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார். அவர் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கே திரும்பியது. விமானத்தின் விமானி, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கி … Read more

நியூயார்க்கின் சில பகுதிகளில் கழிவுநீரில் போலியோ வைரஸ்| Dinamalar

கெரோனா வைரஸ் பரவி உலகத்தை ஆட்டிப்படைத்ததையடுத்து எந்த வைரஸ் என்றாலும் உலகம் முழுதும் நடுக்கம் ஏற்படுகிறது. தற்போது நியூயார்க்கின் சில பகுதிகளில் போலியோ வைரஸ் பரவுகிறது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய சுகாதாரத்துறைக்கு நியூயார்க் கவர்னர் கேத்தி ேஹாச்சுல் உத்தரவிட்டார். அவர்கள் பல இடங்களில் கழிவுநீர் மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். ஆய்வில் 3 இடங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் போலியோ வைரஸ் இருப்பது உறுதியானது. நியூயார்க்கில் பேரிடர் அவசர நிலையை கவர்னர் அறிவித்துள்ளார். கெரோனா வைரஸ் பரவி … Read more

பூனையின் மீது கொண்ட காதல்! வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றிய தம்பதி!

அமெரிக்காவின் வின்கான்சின் பகுதியிலுள்ள மேனோமோனி ஃபால்ஸ் என்கிற கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ஷாவ்ன் ரெட்னர் மற்றும் அவரது மனைவி ஹிலாரி சீகல் ரெட்னர்.  இவர்கள் பூனைகளை பாதுகாப்பதற்காகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காகவும் தனது வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.  கடந்த 2020ம் ஆண்டு தான் இவர்கள் அவர்களது வீட்டை பூனை அருங்காட்சியமாக மாற்றியுள்ளது, அப்போது இந்த அருங்காட்சியகத்தில் 4000 பூனை உருவங்களை பார்வைக்காக வைத்தனர்.  இந்த ஆண்டு ஜூலையில் மேலும் 3000 … Read more

வடகொரியாவில் ஆட்சியை கவிழ்க்க வெளிநாடுகள் சதி செய்தால் அணு ஆயுத தாக்குதல் நடத்த கிம் ஜாங் உன்னுக்கு அதிகாரம்

பியாங்யாங்: எதிரி நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வடகொரியாவிடம் சுமார் 40 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வடகொரிய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அணு ஆயுதம் தொடர்பான புதிய … Read more

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்| Dinamalar

லே: பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகரம் லே உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று(செப்.,11) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாவது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லே: பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகரம் லே உள்ளது. … Read more

முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்

கீவ்: உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குபியான்ஸ்க் நகரை அந்த நாட்டு ராணுவம் ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது. நேட்டாவில் இணைய முயன்றதாக குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 199-வது நாளாக போர் நீடித்தது. இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் … Read more

உலக மக்களை உலுக்கிப்போட்ட 9/11 தாக்குதல்கள்: இன்று 21 ஆவது நினைவு தினம்

உலக வரலாற்று பக்கங்களை திருப்பிப்பார்த்தால், யாராலும் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத பல பயங்கரவாத தாக்குதல்களை நாம் காண்போம். அதில், அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் மிக முக்கியமானது. இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே கதிகலங்கச்செய்தது. அந்த பயங்கரவாத சம்பவத்தின் நினைவு தினம் இன்று.  2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு, அல் கொய்தா பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் … Read more

வட கொரியாவின் சட்டம் அமைதிக்கு விடுத்த மிரட்டல் – பிரான்ஸ் கருத்து

பாரிஸ்: வட கொரியாவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்ட அறிவிப்பு சர்வதேச அமைதிக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் என்று பிரான்ஸ் நாடு கருத்து தெரிவித்துள்ளது. வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது. திரும்பப் பெற … Read more