கனடாவை தாக்க காத்திருக்கும் 'பியோனா' புயல்!

கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பியோனா புயல் அட்லாண்டிக் கடலில் உள்ள தீவான பெர்முடாவை பலத்த மழை மற்றும் காற்றுடன் நேற்று தாக்கியது. அங்கு மணிக்கு 103 மைல்கள் (166 கிமீ) வேகத்தில் காற்று வீசியது என்று பெர்முடா வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து … Read more

Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா… அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடத்திய புரட்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு சிறையில் உள்ளதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. அதில் சீன ராணுவம் அதிபர் ஜி ஜின்பிங்கை வீட்டில் வைத்து கைது செய்து அவரது அதிகாரத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது என கூறப்பட்டுள்ளது . சில வருடங்களுக்கு முன்பு மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இதுதான் நடந்தது. ட்விட்டரில் #XiJinping என்ற … Read more

போராடும் ஈரான் மக்களுக்கு இணைய சேவையை வழங்கும் எலான் மஸ்க்

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஈரானில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா? உண்மை என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த உலகத் தலைவரையும் சந்திக்கவில்லை, அவர் சார்ந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைக் கூட சந்திக்கவில்லை. இருப்பினும், செப்டம்பர் 14 அன்று, அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு … Read more

சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்காத பாக்.,: இந்தியா பதிலடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காமல், சர்வதேச அரங்கில் அமர்ந்து கொண்டு அதே சிறுபான்மையினர் உரிமையை பேசுவது வேடிக்கையாகும் என தெரிவித்துள்ளது. ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது: கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: 8 நாட்களில் 50 பேர் பலி; பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள், “ ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் … Read more

கண்ணீருடன் விடை பெற்றார் பெடரர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி போட்டியில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் பெடரர், கண்ணீருடன் விடை பெற்றார். இங்கிலாந்தின் லண்டனில், லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன. ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். … Read more

அமைதியை விரும்பும் நாடு ஏன் தாவூத்துக்கு அடைக்கலம் தருகிறது? – ஐ.நா. சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 77வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி பாகிஸ்தான் பிரதார் ஷபாஸ் ஷெரீஃபின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், “பாகிஸ்தான் இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவுடனான சுமுகமான உறவு அது காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை சாத்தியப்படாது” … Read more

மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர்கள் போலிக் கையுடன் வலம் வருகிறார்களா? – இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்

லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர் களாக வரும் நபர்கள், போலிக்கைகளுடன் வலம் வருவதாகவும், உண்மையான கையில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர் எனவும் இணையத்தில் போட்டோவுடன் கூடிய தகவல்கள் வைரலாக பரவியுள்ளன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின், இளவரசராக இருந்த சார்லஸ், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இயைடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் மெய்க்காப்பாளர்கள் வருகின்றனர். மன்னர் சார்லஸ் பொது மக்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறும் சில போட்டோக்கள் வெளியாயின. … Read more

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தொடங்கியது

கீவ், உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் ரஷியா போர் தொடுத்து வருகிறது.தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷிய படைகள் கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் மீது கவனம் செலுத்த தொடங்கின. இதன் மூலம் கிழக்கு, தெற்கு உக்ரைனில் உள்ள பல பகுதிகள் ரஷிய வசம் வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் … Read more