அமெரிக்காவில் விமானத்தைக் கடத்தியவர் ‘வால்மார்ட்’ மீது மோதுவதாக மிரட்டல்; போலீஸ் முயற்சியால் தணிந்த பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர், வால்மார்ட் வர்த்தக கட்டிடத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மிசிஸிப்பி மாகாணத்தில் உள்ளது டுபேலா நகரம். அந்நகரிலுள்ள விமான நிலையத்தில் குட்டி விமானம் ஒன்று மர்ம நபரால் கடத்தப்பட்டது. கடத்திய நபர், வால்மார்ட் வர்த்தக கட்டிடத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இந்த விமானக் கடத்தல் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பல மணி நேரம் காவல்துறையினர் விமானத்தை … Read more

ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள்..! – வைரஸ் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை..!

ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனாதொற்று பதிப்புகள் பதிவாகியுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக, ரஷ்யாவில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனாதொற்று பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. மற்றும் 51,699 சோதனைகள் பாசிட்டிவ் ஆக வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 50,952 … Read more

பிரிட்டன் அடுத்த பிரதமர் யார்? – நாளை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி … Read more

கோவிட், உக்ரைன் போரின் போது இந்தியா உதவி: வங்கதேச பிரதமர் நன்றி| Dinamalar

டாகா: கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ஷேக் ஹசீனா நாளை(செப்.,5) இந்தியா வருகிறார். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போது, இந்தியா அளித்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து … Read more

வால்மார்ட் கட்டடத்திற்கு மிரட்டல்: விமானத்தை திருடி ஆட்டம் காட்டிய விமானி கைது!

9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடிய விமானியை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில், பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக, விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுமார் 3 மணி நேரம் 29 வயதான விமானி சுற்றி வந்தார். இந்த … Read more

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏராளமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு டெக்சாஸின் ஈகிள் பாஸ் நகர் அருகே கனமழையால் நீர்வரத்து அதிகரித்த ரியோ கிராண்டே ஆற்றைக் கடக்க முயன்றபோது கவிழ்ந்தது. புலம்பெயர்ந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தண்ணீரில் தத்தளித்த 90-க்கும் மேற்பட்டோரை அமெரிக்க-மெக்சிகோ அதிகாரிகள் இணைந்து மீட்டனர். Source link

அமெரிக்காவை தாக்க வந்த விமானம்| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள பிரபல வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார்.அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி உள்ளது. இதனை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த 29 வயது வாலிபரான விமானி , விமானத்தில் சுற்றினார். அவருடன் டுபேலா நகர போலீசார் பேசினர்.முன்னெச்சரிக்கையாக அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.அந்த வாலிபர் விமானத்தை திருடிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. … Read more

சோவியத் யூனியன் மாஜி தலைவர் கார்பசேவின் இறுதிச் சடங்கை புறக்கணித்தார் ரஷ்ய அதிபர் புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ-சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவின் இறுதிச் சடங்குகளில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அறிவிக்காததுடன், இறுதிச் சடங்கையும் புறக்கணித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவ், 91, சமீபத்தில் உயிரிழந்தார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் நோவோடெவிசியில் உள்ள அவருடைய மனைவியின் கல்லறைக்கு அருகே, கார்பசேவின் உடலடக்கம் நேற்று நடந்தது.முன்னதாக, … Read more

சீனாவில் புதிதாக 1,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 2,038 பேருக்கு … Read more

தைவானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு

தைவானுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள், வானில் இருந்தே வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் மற்றும் ஹார்பூன் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாஷிங்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும், சீனாவின் உள் விவகாரங்களில் … Read more