பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்

கராச்சி: பாகிஸ்தானில் கடுமையான பருவமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், சில நாட்களில் 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்றது. பாகிஸ்தானின் சார்சடாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்த குடும்பங்கள் வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்று கவலையுடன் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வரும் மக்களின் நிலைமையை பார்வையிட, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார். … Read more

பேருந்து நிறுத்தம் மீது மோதிய லாரி – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த பள்ளிக் குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த … Read more

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்… சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல்

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் கடைசி நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சனிக்கிழமை ஆர்டெமிஸ் 1 ராக்கெட் … Read more

அயர்லாந்தில் தண்ணீரில் மூழ்கி கேரள சிறுவர்கள் பலி| Dinamalar

லண்டன்: அயர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள எனாக் லக் என்ற இடத்தில் அமைந்துள்ள ஏரியில் குளிப்பதற்கு நண்பர்கள் 6 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஆழம் நிறைந்த பகுதிக்கு சென்று தண்ணீருக்குள் சிக்கினர். அங்கிருந்து வெளியேற முடியாததால் கூச்சல் போட்டுள்ளனர். இதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டு பேர் … Read more

ரத்தம் சிந்தாமல் முடிந்த பனிப்போர்: யார் இந்த மிக்கைல் கொர்பச்சேவ்!

பனிப்போரை இரத்தம் சிந்தாமல் முடிவுக்குக் கொண்டு வர உதவிய சோவியத் யூனியனின் 8ஆவது மற்றும் கடைசி அதிபர் மிக்கைல் கொர்பச்சேவ் உடல்நலக் குறைவு காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனின் அதிபராக 1985 முதல் 1991ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் மிக்கைல் கொர்பச்சேவ். அதேகாலகட்டத்தில் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவியில் இருந்தார். கொர்பச்சேவ் மரணம் குறித்து … Read more

சோவியத் யூனியனின் மூத்த தலைவர் மிகைல் கோர்பசேவ்(mikhail gorbachev) காலமானார்!

சோவியத் ஒன்றியத்தின் முதுபெரும் தலைவரான மிகைல் கோர்பசேவ் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மிகைல் கோர்பசேவ்வின் சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாக மாறியது. சோவியத் யூனியன் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் வினியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் மிகைல் … Read more

வடக்கு அயர்லாந்தில் கேரள சிறுவர்கள் பலி| Dinamalar

லண்டன் : வடக்கு அயர்லாந்தில், ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி கேரளாவை சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.ஐரோப்பிய நாடான வடக்கு அயர்லாந்தில் வசித்த, இந்திய வம்சாவளியான கேரளாவை சேர்ந்த ஜோசப் செபாஸ்டியான்,16, ரியூவன் சிமோன்,16, ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு ஏரியில் குளித்தனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். லண்டன் : வடக்கு … Read more

இடைக்கால பட்ஜெட் இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தாக்கல் செய்தார்.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்த … Read more

இடைக்கால பட்ஜெட்: இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் … Read more

ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு – ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை

நியூயார்க்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறின. இதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் … Read more