கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி; வன்முறை வெடித்ததால் பதற்றம்

நைரோபி: கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49% வாக்குகள் பெற்று வில்லியம் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவருமான ரெய்லா ஒடிங்கா 48.85% வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தேர்தலில் முறைக்கேடு நடந்துள்ளதாக ரெய்லா ஒடிங்கா குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். … Read more

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை உத்தரவு முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிபர் அலுவலகம் தகவல்

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை உத்தரவு முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு மக்களின் போராட்டதை கட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவசர நிலையை பிறப்பித்தார். தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சுமூகமான நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாளையுடன் முடிவடையும் அவசர நிலை உத்தரவை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பில்லை என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   Source link

உக்ரைன் போரை நீட்டிக்க விரும்புவதுடன் பிற நாடுகளிலும் போரை தூண்டும் அமெரிக்கா: புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைன் போரை நீட்டிக்க விரும்பும் அமெரிக்கா உலகின் பிற நாடுகளிலும் போரை தூண்டுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டி உள்ளார். ரஷ்யாவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை காணொலி மூலம் அந்நாட்டு அதிப்ர விளாடிமிர் புதின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உக்ரைன் நிலவரத்தைப் பார்த்தால், போர் நீடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புவதைக் காட்டுகிறது. இதுபோலவே, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போரைத் தூண்ட அமெரிக்கா முயற்சித்து … Read more

அமெரிக்கா – ரஷ்யா இடையே அணு ஆயுத போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர்: ஆய்வில் தகவல்

நியூயார்க்: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ்பெற்ற ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 6 வெவ்வேறு அணுசக்தி போர் சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேச்சர் ஃபுட் இதழில் அந்த ஆய்வு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான அணு … Read more

70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம்.. புகழ்பெற்ற கார்டா ஏரி பாறைகற்கள் வெளிப்பட்டது..!

இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள்  வெளிப்பட்டது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. வடக்கு இத்தாலியில் உள்ள பல ஏரிகள் மற்றும் ஆறுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கார்டா ஏரியில் 20 முதல் 25 மீட்டர் நீளத்திற்கு கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டுள்ளன. Source link

இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், The Period Products (Free Provision) என்ற சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தில் தேவையான பொருட்களை வழங்குவது அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் அணுகும் … Read more

பூமியில் அழிந்துவிட்ட டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் விஞ்ஞானிகள்

மெல்போர்ன்: உலகில் அழிந்த விலங்கினங்களில் ஒன்றான டாஸ்மேனியன் புலியை ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது டாஸ்மேனியன் புலி. இவை தைலசின் (ஓநாய் போன்ற விலங்கு) என்றும் அழைக்கபடுகின்றன. இவை 1936-ஆம் ஆண்டு வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், பருவநிலைச் சூழல் காரணமாக இந்த வகை இனங்கள் அழித்தன. உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி, டாஸ்மேனியாவில் … Read more

இலங்கை துறைமுகத்திற்கு வந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வான்-5.. தமிழக கடலோரப் பகுதியில் உஷார் நடவடிக்கை..!

சீன உளவுக் கப்பல் யுவான் வான்-5 இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததை அடுத்து, தமிழக கடலோரப் பகுதியில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன ராணுவத்திடம் உள்ள 7 உளவுக் கப்பல்களில் ஒன்றான யுவான் வாங்-5 பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாகும். 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களைக் கண்காணிப்பதுடன், செயற்கைக்கோள்கள், ஏவுகணைகளையும் ஆய்வு செய்ய முடியும். இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அரசு அம்பாந்தோட்டை … Read more

பாகிஸ்தானில் பேருந்து, டேங்கர் லாரி மோதி தீப்பிடித்தில் 20 பேர் உயிரிழப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் நெடுஞ்சாலையில் பேருந்தும் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது மிகப்பெரிய சாலை விபத்தாகும் இது. … Read more

இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் | 750 கி.மீ. தொலைவு வரை உளவு பார்க்க முடியும் – 6 கடற்படைத் தளங்களுக்கு குறி?

கொழும்பு: இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. யுவான் வாங்க் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. தற்போது யுவான் வாங்க் 5 என்ற சீன உளவு … Read more