நேபாளத்தில் ஒரே நேரத்தில் பரவும் கொரோனா & பன்றி காய்ச்சால்..! –மக்கள் பீதி..!

உலகம்முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்நேபாளத்தில் கொரோனாவும் பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பரவி மக்களை பீதி அடையச்செய்துள்ளது. நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில்கொரோனா,பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாககொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளானடெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்என்1 போன்றவைமக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன. நேபாளத்தில்கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள … Read more

முடிவுக்கு வந்தது போர் பதற்றம் | தைவான் எல்லையில் ராணுவ பயிற்சி நிறைவு பெற்றதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது. முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தைவான் ராணுவமும் பதிலடி அளித்திருந்தது. இந்த நிலையில், … Read more

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.!

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக ஸ்பெயின் வளர்ந்து வருகிறது. 2 புள்ளி 5 பில்லியன் யூரோ செலவில் 56 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஸ்பெயினுடன் கையெழுத்திட்டது. இந்தியா அதன் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ஸ்பெயினுடன் நெருக்கமாக செயல்படுகிறது. அதற்கு ஏற்ப ஸ்பெயினிடம் இருந்து ஐந்து கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா பரிசீலித்து வருகிறது.ஸ்பெயின் உட்பட பல நாடுகள் இதற்கான டெண்டரில் பங்கேற்கின்றன. Source link

குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம் : ஊழியர்கள் கொண்டாடும் நிறுவனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் … Read more

இந்தியாவுக்கு சிறப்பு சலுகை: அமெரிக்கா விரைவில் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது. இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா … Read more

'கரோனாவை வென்றுவிட்டோம்' – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான் சர்வாதிகார தலைவர். அவர் உத்தரவுப்படி மட்டுமே அனைத்தும் இயங்கும். அங்கே வெளிநாட்டு ஊடகங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆகையால் கேசிஎன்ஏ (KCNA) எனப்படும் அரசு ஊடகம் வெளியிடும் தகவல் தான் கிடைக்கக்கூடிய ஒரே ஆதாரம். இந்நிலையில் KCNA கேசிஎன்ஏ ஊடக செய்தியில், … Read more

கருந்துளைகளுக்குப் பின்னால் X-Ray கதிர்கள்: அவிழும் பிரபஞ்ச ரகசியம்!

800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையில் இருந்து எக்ஸ் ரேகதிர்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒரு விசித்திரமான வடிவம் இருப்பதை  ​​ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த கதிர்களை பிரபஞ்சத்தில் வெளியேற்றுவது கருந்துளை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  இந்த நிகழ்வை விளக்கும் விஞ்ஞானிகள், கருந்துளைகளில் வாயு அதிவேகமாக உள்ளே நுழையும் போது எரிப்பு ஏற்பட்ட பின்னர், அதிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அனுமானிக்கின்றனர். கருந்துளையில் வாயு நுழையும்போது ஏற்படும் எரிப்புகள் … Read more

பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் – ஐ.நா. சபையில் மெக்ஸிகோ பரிந்துரை

மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நேற்று 168-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சீனா, தைவான் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. தைவானை ஆக்கிரமிக்க சீனா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போதைய சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் அணிவகுத்து வருகின்றன. இதேநிலை … Read more

சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ் ‘லாங்யா’

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வைரஸ் அங்கு உருவாகியுள்ளது. சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து … Read more

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்

தென்மேற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்படுத்தி வரும் சேதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில், பிரான்ஸ் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே பகுதியில் தீயினால் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஒட்டுமொத்தமாக 57,200 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளது.10,000 குடியிருப்பாளர்கள்வெளியேற வேண்டிய கட்டாயம் … Read more