ஏமனில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து.. 6 பேர் உயிரிழப்பு..!

ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அப்யன் மாகாணத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் வெடித்துச் சிதறி, அந்த தாக்கத்தால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட சதியா என ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source link

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ராஜினாமா: போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: அரசு திறமையுடன் சரியாக செயல்பட வேண்டும் … Read more

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடல்நலனை கருத்தில் கொண்டு அரச கடமைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச கடமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் நேரில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும், தன் இதயம் உங்கள் அனைவருடனும் இருக்கும் என்றும் தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் முடிந்தவரை உங்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்றும் எலிசபெத் கூறியுள்ளார். 96 வயதாகும் எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.  Source link

2 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விமான சேவையை துவக்கியது சீனா: இந்தியாவிற்கு அனுமதியில்லை| Dinamalar

பீஜிங்: கோவிட் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை துவக்குவதற்கு சீனா அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்தியாவிற்கான விமான சேவை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கோவிட் பரவல் காரணமாக, சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய, மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். சர்வதேச நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா தடையை … Read more

நிதியமைச்சர், சுகாதார அமைச்சர் பதவி விலகல்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது கடிதத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கவலை தருகிறது. ஆனால், இதே நிலையில் தொடர முடியாது என்பதால் வெளியேறுகிறேன். அரசாங்கம் ஒழுங்காக, சிரத்தையுடன், திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதே … Read more

விம்பிள்டன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை எதிர்கொண்ட ஜோகோவிச் முதல் இரு செட்களில் தோல்வியடைந்தார். இதையடுத்து தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய கேமரூன் நோரே பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். Source link

நடுவானில் பழுது – ஸ்பைஸ் ஜெட் விமானம் கராச்சியில் தரையிறக்கம்.. விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர்..!

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் எரிபொருளை சுட்டும் இன்டிகேட்டர் திடீரென பழுதானதையடுத்து அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டு 11 மணி நேரம் கழித்து 138 பயணிகள் மாற்று விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே குஜராத் மாநிலம் காண்டலாவில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் வெளிப்பகுதியில் உள்ள விண்ட் ஷீட்டர் உடைந்து நொறுங்கியது. நடுவானில் ஏற்பட்ட இந்தப் பழுதால் ஆபத்தில் … Read more

ஈபிள் கோபுரத்தை 60 மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கும் பணி விரைவில் ஆரம்பம்..!

பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் 60மில்லியன் யூரோ செலவில் சீரமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோபுரம் ஆயிரத்து 63 அடி உயரம் கொண்டதாகும். 19ஆம் நூற்றாண்டில் Gustave Eiffel என்பவரால் முழுவதும் இரும்பினை பயன்படுத்தி இந்த கோபுரம் கட்டப்பட்டதாகும். இதனை பார்க்க ஒவ்வொரு வருடமும் 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், … Read more

பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை.. பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!

தென்மேற்கு பாகிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, மாகாண பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஒரே இரவில் பெய்த மழையில் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  Source link

மியான்மரில் இந்திய வம்சாவளியினரான இரண்டு தமிழர்கள் நெற்றியில் சுட்டுக் கொலை..!

மணிப்பூரில் இருந்து மியான்மரில் குடியேறிய இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்டோ ஓட்டுனரான மோகன் மற்றும் வணிகரான அய்யனார் ஆகிய இருவரும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.  மோட்டார் சைக்கிள்களில் வந்த மியான்மர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரையும் நெற்றியில் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எதற்காக இந்தக் கொலைகள் நடைபெற்றன என்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது மக்கள் கொலையாளிகளைக் கைது செய்ய … Read more