விமானங்களுக்கு ஈடாக 300 மைல் வேகத்தில் சென்ற ஜெட் டிரக் தீப்பிடித்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த விமான கண்காட்சியில், விமானங்களுடன் பந்தயத்தில் ஈடுபட்ட ஜெட் டிரக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. பேட்டீல் கிரேக் நகரில் நடைபெற்ற விமானக் கண்காட்சி மற்றும் ராட்சத பலூன் திருவிழாவில், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரு விமானங்களுக்கு ஈடாக 300 மைல் வேகத்தில் பந்தயம் சென்ற ஜெட் டிரக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்தது. வாகனத்தின் பாகங்கள் வெடித்து சிதறிய நிலையில், சில அடி தூரத்திற்கு டிரக் உருண்டு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. … Read more

மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு – அலறி ஓடிய மக்கள்

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பலர் தங்கள் உயிரை காக்க அலறியடித்து கொண்டு ஓடினர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு எங்கிருந்து நடக்கிறது என யூகிக்க முடியாமல் மக்கள் பதறியடித்து ஓடினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர்.   Source link

அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு; தலைமை நீதிபதி ரமணா விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான் பிரான்சிஸ்கோ-”ஆளுங்கட்சிகள் தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதித் துறை ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கின்றன. அதேநேரத்தில் தங்களுடைய அரசியல் முன்னேற்றத்துக்கு தீர்ப்புகள் உதவும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ”ஆனால், அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டார். அரசியல் சாசனம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த … Read more

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்; உலக நாடுகளுக்கு தலீபான் எச்சரிக்கை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை … Read more

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி போட வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு பதில்

மாஸ்கோ, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜெர்மனி என உலக நாடுகள் பலவற்றில் குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. 51 நாடுகளில் 5,100 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் உள்ளது. இதனால் இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ரஷிய பிரிவின் தலைவர் மெலிட்டா வுஜ்னோவிக் கூறுகையில், ” குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. ஆனால் சில குறிப்பிட்ட … Read more

அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்

வெனிஸ், இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கலாசாரம் கொண்ட நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வெனிஸ் நகரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெனிசூலா வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சமீபத்திய ஆண்டுகளில் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவது அந்த நகருக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இந்த நிலையில் அதிகப்படியான … Read more

விவசாயிகளுக்கு மானியம் எதிர்த்து பைடனுக்கு கடிதம்| Dinamalar

வாஷிங்டன்:விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியில், 10 சதவீதத்துக்கு மட்டுமே மானியம் வழங்க வேண்டும். … Read more

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா- இலங்கை அரசு

கொழும்பு, 5 ஆண்டு விசா வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் திவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அந்த நாட்டு அரசு. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசாக்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கான விசாக்களை பெறுவதற்கு ஆண்டுதோறும் மிகப்பெரும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. … Read more

விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-விவசாயிகளுக்கு இந்தியா அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த, உலக வர்த்தக அமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட, 12 எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகள் செய்யும் உற்பத்தியில், 10 … Read more

எதிர்ப்புக்கு மத்தியில் மியான்மர் வந்தார் சீன வெளியுறவு மந்திரி

பர்மா, மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார்.இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய … Read more