பொருளாதார நெருக்கடியைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தேன்: கோத்தபய ராஜபக்ச

பொருளாதார நெருக்கடியைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்ததாக இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்தது. அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார். நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால … Read more

“பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முயற்சித்தும், அவை பலன் தரவில்லை” – கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சித்தும், அவை பலன் தரவில்லை என்றும் மக்களுக்கு எப்போதும் சேவையாற்ற தயாராக உள்ளதாகவும் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடிய போது, சபாநாயகருக்கு கோத்தபய, அனுப்பிய பதவி விலகல் கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பொது முடக்கங்கள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், பொருளாதாரம் மேலும் பாதிப்படைந்ததாகவும் கோத்தபய தெரிவித்துள்ளார். Source link

'பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு' – பைடன் பகிரங்க குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதிக்கு அரசு ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது சவுதியின் ஜெட்டா நகரில் சவுதி இளவரசர் சல்மான், ஜோ பைடனின் சந்திப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பக்கேற்றார். அப்போது ஜமால் கஷோகி மரணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பைடன் அளித்த பதிலில், “ நான் இந்த … Read more

World Snake Day 2022: மருந்தாகும் பாம்பின் விஷம்; சில அரிய தகவல்கள்

பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும், மக்கள் மனதில் அவற்றைப் பற்றிய தவறான எண்ணங்களையும் நீக்குவதற்காக ஜூலை 16ம் தேதி உலக பாம்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாம்புகளை பற்றி பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை . ஒருபுறம் நாம் பாம்புகளுக்கு மிகவும் பயப்படுகிறோம். மறுபுறம் அதனை கடவுளாகவும் வணங்குகிறோம். பூமியில் 3,000 க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து தவிர எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த அனைத்து உயிரினங்களிலும், … Read more

சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதலில் 31 பேர் உயிரிழப்பு – 16 கடைகள் சூறையாடப்பட்டன..!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்தனர். அல் – டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவுநேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வன்முறை மூண்டது. இதில், 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 39 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு – இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு!

நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு ஒன்றை நியமித்து உள்ளதாக இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என, அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அதன்பிறகும் அங்கு பிரச்னைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் … Read more

கட்டிப்படிக்க 7,100 ரூபாய் கட்டணம் – கட்டிப்பிடி வைத்தியத்தை தொழிலாக மாற்றிய இளைஞர்

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் வசூல்ராஜா MBBS. இந்தப் படத்தில் கமல் ஹாசன் கட்டிப்பிடி வைத்தியம் என்ற முறையை பிரபலப்படுத்தினார். யாரேனும் சிடுசிடுவென்றோ, விரக்தியாகவோ இருந்தால் அவர்களை கமல் கட்டிப்பிடிப்பார். அப்போது அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றி சாந்தமாவது போல் காட்சிகள் இருக்கும். சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் யாரேனும் ஒருவர் மற்றொருவரை கட்டிப்பிடித்தால் நேர்மறையான எண்ணங்களே தோன்றும். தற்போது இந்த விஷயம் பல நாடுகளில் பரவி வருகிறது. மசாஜ், ஸ்பா போன்று … Read more

Existence of Aliens: ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துகிறதா ரேடியோ சிக்னல்

பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் நமக்குத் தெரியாது. இன்னும் உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. வேற்று கிரகவாசிகள் என்னும் ஏலியன்கள் (அவை இருந்தால்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்ற அனுமானங்களும் நம்ப்பிக்கைகளும் அதிக அளவில் உள்ளன. விஞ்ஞான அடிப்படையிலான தேடல்களும் அவை கொடுக்கும் நம்பிக்கைகளும் ஏலியன்கள் தொடர்பான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. இருந்தாலும், இன்னும் அறுதியான இறுதி முடிவுகளை ஏலியன்கள் ஆராய்ச்சி இதுவரை கொடுக்கவில்லை. தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது பணியை தொடங்கிய நிலையில், அந்த அற்புத தொலைநோக்கி … Read more

சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி: பின்னணி என்ன?

பீஜிங், சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதாரம் 0.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கத்தை நீண்ட காலம் அமல்படுத்தி இருந்தனர். நீண்டதொரு பொது முடக்கத்துக்கு பின்னர் கடந்த மே மாதம்தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது, தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட … Read more

பிரிட்டனின் ‘அத்திப்பட்டி’; மாயமான கிராமத்தை வெளிகொணர்ந்த வெப்பம்

உலகின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.  பிரிட்டனில் கடும் வெப்பத்தினால், அங்குள்ள ஒரு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்த பிறகு, 17 ஆம் நூற்றாண்டின் பழமையான கிராமத்தின் இடிபாடுகள் இப்போது தென்படுகின்றன. ‘வெஸ்ட் எண்ட்’ என்பது ஒரு சிறிய கிராமமாகும்,  சுமார் 400 அண்டுகள் பழமையான இந்த கிராமம் 1966 ஆம் ஆண்டில்  நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.   வெப்பநிலை அதிகரித்துள்ளதன் காரணமாக … Read more