மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே… வெளியான பரபரப்பு தகவல்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எந்த நாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் தனது விமானத்துடன் மாலத்தீவில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கோத்தபய ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளதாகவும், அது இன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி, மெய்ப்பாதுகாவலர் மற்றும் விமானியுடன் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக … Read more

‘‘ஆதாரமற்ற செய்தி’’- கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊகத்தின் அடிப்படையிலான ஊடக தகவல்களை திட்டவட்டமாக மறுப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்…!

கொழும்பு, இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே … Read more

நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள் வெளியீடு

உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கியின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கரீனா நெபுலா முதல் தெற்கு ரிங் வரை எடுக்கப்பட்ட மேலும் 5 படங்கள் நாசா நேற்று வெளியிட்டது. Source link

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டது; அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன், சிரியாவின் வடமேற்கே ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், டாப் 5 ஐ.எஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டு உள்ளார். இதேபோன்று, நடந்த மற்றொரு தாக்குதலில், அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலால், … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோட்டம்

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர். மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்தது என்ன? – இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார … Read more

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. Jindayris பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐ.எஸ். தலைவர் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதாக பெண்டகன் மத்திய கமாண்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. Levant பிராந்தியத்தின் ஆளுநராக மகெர் அல் அகல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது Source link

ஜப்பான் மாஜி பிரதமர் இறுதி சடங்கு: கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்| Dinamalar

டோக்கியோ : தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு டோக்கியோவில் நேற்று நடந்தது. ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதற்காக நாட்டின் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கடந்த 8ம் தேதி மேற்கு ஜப்பானின் நரா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் முன் சாலையில் நின்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். … Read more

அத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்…!

கீவ், உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை … Read more

உலக மக்கள் தொகை நவ., 15ல் 800 கோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : இந்தாண்டு நவ.15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.ஐ.நா. உலக மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவ.15ல் 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 … Read more