ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை… 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைக்க வலியுறுத்தல்!

ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதால், 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. பல வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்போர் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் வடமேற்கு நகரமான இசெசாகியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. Source link

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் பானிப்பூரி விற்கத் தடை..!

வட இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமடைந்து வரும், பானிப்பூரியின் விற்பனை நேப்பாள தலைநகர் காட்மாண்டுவில் தடை செய்யப்பட்டுள்ளது. பானிப்பூரியுடன் கலக்கப்படும் நீரில் மலேரியாவை உண்டுபண்ணும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் பானிப்பூரியை விற்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லலித்பூர் என்ற இடத்தில் இதுவரை 12 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க இம்ரான் கானே காரணம்: ஷெபாஸ் ஷெரீப் விமர்சனம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்குப் பின்னால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், “கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்கு இம்ரான் கான்தான் காரணம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பாகிஸ்தானின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த நான்கு … Read more

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு எல்லையோர மாகாணமான நியூவோ லியோனில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

எருது சண்டையின் போது சரிந்து விழுந்த மேடை – 4 பேர் பலி

கொலம்பியாவின் எஸ்பினல் நகரத்தில் கொரலேஜோ எனப்படும் பாரம்பரிய எருது சண்டை நடைபெற்றது. எருது சண்டையைப் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக பல அடுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மேடை சரிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த மேடை மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்ததாலே பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் … Read more

விண்வெளியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க சீனா நடவடிக்கை..!

விண்வெளியில் முதல் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இத்திட்டத்திற்கன முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வருகிற 2028ஆம் ஆண்டில் அந்த மின்னுற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு என கூறப்படுகிறது. 10 கிலோ வாட் திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி நிலையம், சூரிய ஒளியை மின்சாரம் மற்றும் நுண்ணலைகளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும், செயற்கைக்கோள்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது Source link

எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது 9 ஆயிரம் டன் டீசலும், ஆறாயிரம் டன் பெட்ரோலும் இருப்பு உள்ளது. அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலையில், எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விமானப்படை வீரர்கள் டோக்கன்களை வழங்கினர்.     Source link

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் முனிச்: மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை … Read more

‘‘மலிவு விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வேண்டும்’’- இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவில் முகாம்

கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் … Read more

அமெரிக்காவில் 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த தாய் கைது..!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிரான்ஸ் என்ற பெயருடைய 31 வயது பெண், தனது 3 வயது மகனை கொன்று குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் வீட்டின் கீழ்தளத்தில் குளிர்பதன பெட்டியிலிருந்து அந்த குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். அந்த குழந்தை எதற்காக, எப்போது கொல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  Source link