இந்தியாவிடம் இருந்து 3 லட்சம் டன் அரிசி வாங்க இலங்கை அரசு திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன், மியான்மரில் இருந்து ஒரு … Read more

உக்ரைன் : உறைந்த ஏரியின் நடுவே பனியில் சிக்கித் தவித்த நாய்.. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் நாயைக் காப்பாற்றிய இளைஞர்.! <!– உக்ரைன் : உறைந்த ஏரியின் நடுவே பனியில் சிக்கித் தவித்த நா… –>

உக்ரைன் நாட்டில் பனிப் பாளத்தில் சிக்கித் தவித்த நாயை இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார். டொனெட்ஸ்கில் என்ற இடத்தில் உறைபனி காரணமாக அங்கிருந்த நீர் நிலைகள் அனைத்தும் பனியாக மாறிப் போயின. இதில் மைனஸ் 7 டிகிரி என்ற வெப்பநிலையில் கல்மியஸ் ஏரியும் உறைந்து போனது. இந்த ஏரி வழியாக வந்த இரு நாய்களில் ஒன்று பனிப் பாளத்தின் நடுவே சிக்கி உயிருக்குப் போராடியது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் தனது ஆடைகளைக் … Read more

உலகில் 40 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு| Dinamalar

லண்டன்: இன்றைய (பிப்.,09) காலை நிலவரப்படி, உலகில் 40.02 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 57.80 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 32.03 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில் 1.42 லட்சம் பேருக்கும், ஜெர்மனியில் 2.12 லட்சம் பேருக்கும், இத்தாலியில் 1.01 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 1.65 லட்சம் பேருக்கும் புதிதாக கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இன்றைய (பிப்.,09) காலை நிலவரப்படி, உலகில் 40.02 கோடி பேருக்கு … Read more

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 66,183 பேருக்கு தொற்று..!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 66,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,32,803 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 54 … Read more

Honour killing: மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன்!

குடும்பத்தில் தகராறு வருவது இயல்பானதுதான். ஆனால், கோபத்தில் மனைவியின் தலையை வெட்டுவதும், அதைத் தூக்கிக் கொண்டு தெருவில் வலம் வருவதும் கொடூரத்தின் உச்சம். ஆணவக்கொலை என்பது காதல், சாதியின் அடிப்படையில் மட்டுமல்ல, நடத்தையில் ஏற்படும் சந்தேகமும் இப்படிப்பட்ட கொடூரங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆணவக்கொலை கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தொடரும் கொடுமை. இரானில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணை அவரது கணவரும், கணவரின் சகோதரரும் வெட்டிக் கொன்றனர். துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் சுற்றித் … Read more

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் … Read more

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான வீடியோ

டெஹ்ரான்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில்  அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் … Read more

இந்திய ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : ‘ஆஸ்கர்’ விருது பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த, ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1 – டிச., 31 வரையிலான காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மார்ச் 27ல் அமெரிக்காவில் நடக்கிறது.இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்,நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டன.இதில், ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய, ‘ரைட்டிங் வித் … Read more

ரஷ்யாவில் புதிதாக 1,65,643 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 39.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.73 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more

ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஒட்டாவா: கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரக்கு லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் அந்நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது.  சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்  … Read more