ஒரு லிட்டர் சோடாவை 6.8 விநாடிகளில் குடித்து சாதனை படைத்த அமெரிக்க உணவுப் பிரியர்

அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஜேம்ஸ் பேட்லேண்ட்ஸ் ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தான். அந்த வகையில் மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியரான எரிக் ஜேம்ஸ், சாப்பிடுவதில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.  Source link

கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவுக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பாலான அமைப்புகள் மற்றும் சமூக சேவையாளர்கள் இந்த முடிவை பழமைவாத முடிவு என எதிர்க்கின்றனர்.  தெருக்களில் மக்கள் போராட்டம் அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி  போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த முடிவு … Read more

உணவு பொருட்களை சாப்பிடச் சென்ற கரடி : காருக்குள் சிக்கிக்கொண்டு வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சோகம்

அமெரிக்காவில், காருக்குள் சிக்கி கொண்ட கரடி வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது. டென்னிசி மாநிலத்தில் சரியாக பூட்டப்படாத காருக்குள் உணவு பொருட்கள் இருப்பதை கவனித்த கரடி பற்களால் கதவை திறந்து காருக்குள் புகுந்துள்ளது. கார் கதவு தானாக சாத்தி கொண்டதால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட கரடி, வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து உள்ளேயே உயிரை விட்டது. காருக்குள் கரடி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். நாய்களை விட கரடிகளுக்கு மோப்ப சக்தி அதிகம் … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி : தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க 4, ஜி-7 நாடுகள் முடிவு

ரஷ்யாவின் தங்க ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 4 நாடுகள் முடிவு செய்துள்ளன. ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், பொருளாதார தாக்கத்தை தவிர்க்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த பலர், தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதனை தடுத்து  ரஷ்யாவிற்கு மேலும் அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் தங்க ஏற்றுமதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தடை விதிக்கவுள்ளன. இந்நடவடிக்கையால் ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடி ஏற்படுமென இங்கிலாந்து பிரதமர் … Read more

துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம்: அதிபர் ஜோ பைடன் கையெழுத்து!

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி வருகிறது. இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குழந்தைகள் உட்பட ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்கு கடும் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல்.. மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் மூடல்..!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்நகரில் புதிதாக 39 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்குள்ள 12க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்காவ்வில் தற்போது சுமார் 5 ஆயிரம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் அந்த நகரத்தில் வசிக்கும் 6 லட்சம் மக்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக … Read more

போலீசாரின் விசாரணைக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார்.. பாதசாரிகள் மீது மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!

அமெரிக்காவில் போலீசாருக்கு பயந்து தறிகெட்டு ஓடிய கார், நடைபாதையில் சென்றவர்கள் மீது மோதிய விபத்தில்  67 வயதுடைய மூதாட்டி உயிரிழந்தார். நியூயார்க் நகரில் வாகன சோதனையில் கார் ஒன்றின் பதிவெண் போலியாக இருப்பதை உறுதி செய்த போலீசார், அந்த காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர். அதிவேகமாக சென்ற அந்த கார், பாதசாரிகள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.  Source link

World War III: மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்

மூன்றாம் உலகப் போர் நடந்தால் முதலில் லண்டன் மீது குண்டு வீசப்படும் என்று விளாடிமிர் புட்டினின் நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்கனவே உலக அரங்கில் அதிருப்தியை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. மூன்றாம் உலகப் போர் வெடித்தால், நேட்டோவின் இலக்காக முதலில் லண்டன் மீத் தாக்குதல் நடத்தப்படும் அது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான … Read more

இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் 50 ரூபாய் அதிகரிப்பு..!

இலங்கையில் எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 50 அதிகரிக்கப்பட்டு, 470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  உயர்ரக பெட்ரோல் 100 ரூபாய் அதிகரித்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 460 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. Source link

Monkeypox: சமூக பரவலாக குரங்கு அம்மை? – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை என உலக சுகாதார மையம் தொிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கி உள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இது தொடா்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: குரங்கு … Read more