'உங்கள் பிரச்சினை உலகின் பிரச்சினை' மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

பிரஸ்லாவா, ஐரோப்பிய நாடான ஸ்லொவாகியா தலைநகர் பிரஸ்லாவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உக்ரைன் – ரஷியா இடையேயான போர், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, உக்ரைன் – ரஷியா விவகாரத்தில் இந்தியா வேலி மேல் (நிலைப்பாட்டை எடுக்காமல்) அமர்ந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் … Read more

தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்கும் மெக்சிகோ நகர மக்கள்.. வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு..!

மெக்சிகோவில் வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கையை அடுத்து தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை மெக்சிகோ நகர மக்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதுவரை 6 ஆயிரத்து 320 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுடன்  இணைந்து குழந்தைகளும் தங்களிடம் உள்ள விளையாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கு பதிலாக பொம்மைகளை பரிசாக பெற்றனர்.  Source link

விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிக்காக 3 பேர் கொண்ட குழுவை நாளை விண்ணுக்கு அனுப்புகிறது சீனா

பெய்ஜிங், விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இதற்காக பல முறை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சீனா கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் 3 பெரும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் உள்ள சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 6 மாதங்கள் நிறைவடைந்த … Read more

“உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்” – ரஷ்ய அதிபர் புதின்

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உலகளாவிய உணவு சந்தையில் ஏற்படும் பிரச்சனைகளை ரஷ்யா மீது திசை திருப்ப மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகவும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் உரங்கள் மீது விதித்த தடையால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் தெரிவித்தார். ரஷ்யாவும் உக்ரைனும் உலகளவிலான கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

ஐ.நா.கவுன்சிலில் காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் புகாருக்கு இந்தியா பதிலடி!

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. மேலும், இந்த கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் இனப் படுகொலையை யாரும் மறக்க முடியாது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச சட்ட விதிமீறல் விவகாரங்களில் நீதியை நிலைநாட்டுவது குறித்து ஐ.நா. … Read more

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் நடால்..!

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதிபெற்றார். அரை இறுதியில் களமிறங்கிய அலெக்சாண்டர் செவரவ், ரபேல் நடால் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் வென்ற செவரவ், இரண்டாவது செட் ஆட்டத்தின் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டுடன், நடால் மோதவுள்ளார். … Read more

இலங்கை மத்திய வங்கி கவர்னர் நியமன விவகாரம்: கோத்தபய-ரணில் இடையே கருத்து வேறுபாடு

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. பெட்ரோல்-டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயந்ததாலும், பற்றாக் குறையாலும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து அப்பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் … Read more

டெஸ்லா நிறுவனத்தில் ஆட்குறைப்பு முயற்சியில் எலான் மஸ்க் – அச்சத்தில் பணியாளர்கள்!

டெக்சாஸ்(அமெரிக்கா), உலகின் டாப்-10 முன்னணி பணக்காரரும் டெஸ்லா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பகுதியளவு பணியிடங்களை நீக்குமாறு கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்து டெஸ்லா நிறுவன நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், இப்போதிருக்கும் பணியிடங்களில் 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார். அதேபோல, ‘உலகெங்கிலும் புதிதாக யாரையும் பணியமர்த்த வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், டெஸ்லா நிறுவனத்தில் அலுவலகங்களுக்கு வராமல், வீட்டிலிருந்தபடியே பணி செய்துவரும் முறையை அவர் தடை செய்தார். இதை … Read more

தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு.. ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்த வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் வடக்கு முகப்பு ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்தது. அண்மைக் காலமாக பெருகி வரும் துப்பாக்கிச் சூடு வன்முறகளை கட்டுப்படுத்த துப்பாக்கி வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆக உயர்த்துவது, ஆயுதம் வாங்குவோரின் பின்னணியை விசாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிபர் பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை மற்றும் அரசு கட்டடங்கள் ஆரஞ்சு நிறத்தில் … Read more

பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

பாரீஸ் உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் … Read more