பாகிஸ்தான்: 14 வழக்குகளில் இருந்தும் இம்ரான் கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் ஜாமீன் கோரி பெஷாவர் … Read more

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி.!

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முனிச் நகர் நோக்கி அதிகளவிலான மாணவர்களுடன் சென்ற ரயில் Garmisch-Partenkirchen அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தரைக்கு இறங்கி கவிழ்ந்தது. விபத்தில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. Source link

துப்பாக்கி சூடு: மூவர் பலி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில், தேவாலயத்துக்கு வெளியே இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்ட நபர், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் ஆமெஸ் என்ற இடத்தில், ‘கார்னர்ஸ்டோன்’ தேவாலயம் உள்ளது. இதன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.அதன் பின், அந்த மர்ம நபர் தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த பெண்கள் யார், அவர்கள் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இந்த … Read more

பாக். இன படுகொலையை மறக்க முடியுமா?- காஷ்மீர் பற்றிய புகாருக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

நியூயார்க்: பாகிஸ்தானின் இனப் படுகொலையை யாரும் மறக்க முடியாது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச சட்ட விதிமீறல் விவகாரங்களில் நீதியை நிலைநாட்டுவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் பிரதிநிதி ஆமீர்கான் பேசும்போது, ‘‘காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த பகுதியை இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது’’ என்று குற்றம் சாட்டினார். … Read more

கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்.!

சீனா ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு பின் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் அனுமதி அளிக்கப்பட்டது. Jing’an மற்றும் Pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூரோ கோவிட் கொள்கையின் நடவடிக்கையாக வரும் நாட்களில் மெகா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கியது இந்தியா

கொழும்பு: கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா வழங்கிய ரூ.58 கோடி நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆவன செய்வதாக மந்திரி உறுதி … Read more

இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க அமைச்சர்| Dinamalar

வாஷிங்டன் : இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசியதாவது: உலகளவில் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். இதற்காக சர்வதேச நாடுகள், நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. … Read more

தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு

உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டிலுள்ள தானியங்களை திருடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. உலக அளவில் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது உக்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, அந்நாட்டின் ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது, இது உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் தானியங்களை திருடி துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் வாசில் போட்னர் வெள்ளிக்கிழமையன்று (2022, … Read more

இம்ரான் கான் மீது தேசத் துரோக வழக்கு?| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்கு தொடருவது குறித்து, அந்நாட்டின் அமைச்சரவை சிறப்பு குழு கூடி விவாதித்தது.கடந்த மே 25ம் தேதி, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி நடந்த இந்த பேரணியில், போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வெடித்த வன்முறையில், ஏராளமான பொதுச் … Read more

அழித்தொழிப்புக்கு உதாரணம் பாகிஸ்தான்; ஐ.நா., கவுன்சிலில் இந்தியா காட்டம்| Dinamalar

நியூயார்க் : ‘பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பாக்., காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பட் பேசியதாவது:தற்போது வங்கதேசமாக உள்ள கிழக்கு பாகிஸ்தானில், சொந்த மக்கள் என்றும் பாராமல், 50 ஆண்டுகளுக்கு முன்னால் … Read more