கோவிட் கட்டுப்பாடுகளால் சீனாவின் வர்த்தகம் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் -கொரோனா பரவலை தடுக்க, ஷாங்காய் உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலானதால், சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜன., – மார்ச் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம், 4.8 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்றவற்றால், சீனப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், சீனாவின் ஏற்றுமதி மிதமான அளவிற்கே உள்ளது.ரியல் எஸ்டேட் துறை மீதான கட்டுப்பாடுகளால், … Read more

நிதி திரட்டுவதற்காக 165 நாடுகளில், 1.60 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம்.!

தண்டுவட சிகிச்சை தொடர்பான ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்காக 165 நாடுகளில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு லட்சத்து 60,000 பேர் பங்கேற்றனர். Wings for Life என்ற தொண்டு நிறுவனம், 9 ஆண்டுகளாக மே மாத முதல் ஞாயிற்றுகிழமை, இந்த ஓட்டப்பந்தயத்தை நடத்தி வருகிறது. பந்தயத்தின் 30ஆவது நிமிடத்தில், போட்டி தொடங்கிய இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் வேகத்தில் புறப்பட்டு செல்லும் கார், போட்டியாளர்களை கடந்ததும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். 56 கிலோமீட்டர் ஓடிய ரஷ்ய பெண்மணி … Read more

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!| Dinamalar

கொழும்பு :இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது. இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே, 76, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரத்தில், ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் அவரது பாதுகாப்பு … Read more

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – அடுத்து நடக்க போவது என்ன?

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த  … Read more

100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.!

ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்த ஜாக் ரசல் இன மோப்ப நாய்க்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பதக்கம் வழங்கி கவுரவித்தார். பேட்ரன் என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில், வீர தீர சாகசங்களுக்கான பதக்கத்தை அதிபர் செலன்ஸ்கி அணிவித்தார். பதக்கம் பெற்ற உற்சாகத்தில் வாலாட்டிய நாயால் அங்கு சிரிப்பலை எழுந்தது.     Source link

லைவ் அப்டேட்ஸ்; இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு: ஆளும் கட்சி எம்.பி சடலமாக மீட்பு, மேயர் வீட்டிற்கு தீ வைப்பு

கொழும்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழலில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அது தொடர்பான அண்மைச் செய்திகளை கீழ் காணலாம்.  மே 09,  9.00  PM குருங்கலாவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். … Read more

இங்கிலாந்தில் மனிதர்கள் வானில் பறக்க உதவும் “ஜெட் சூட்”கள்

இங்கிலாந்தில், மலைப் பிரதேசங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக வானில் பறக்க கூடிய பிரத்யேக ஜெட் சூட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இரு கைகள் மற்றும் முதுகில் பொருத்தப்பட்டுள்ள டர்பைனில் இருந்து வெளிப்படும் உந்துவிசையின் மூலம், மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில், வானில் 12,000 அடி உயரம் வரை ஒருவரால் பறக்க முடியும் என கூறப்படுகிறது. ஹெலிகாப்டருடன் ஒப்பிடுகையில், ஜெட் சூட்கள் மூலம் மீட்பு பணிகளை சிக்கனமாக மேற்கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றை பயன்படுத்த தற்போது மருத்துவ … Read more

2ம் உலக போரில் பலியான முன்னோர்களின் புகைப்படங்களுடன் ரஷியர்கள் பேரணி

மாஸ்கோ, 2ம் உலக போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராக ரஷியா போரிட்டது.  இந்த போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தி வெற்றி பெற்றது.  இதனை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடைபெறும். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலிலும், இந்த ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டங்களி நடந்தன.  அதன்படி, இன்று ராணுவ அணிவகுப்பு நடந்தது.  இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார்.  இந்த 2ம் … Read more

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலி.. சீனாவின் பீஜிங்கில் வணிக வளாகங்கள் உட்பட பல கடைகள் மூடல்.!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக சீனாவின் மத்திய பீஜிங்கில்  வணிக வளாகங்கள் உட்பட பல கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. ஷாங்காயை போன்று நிலைமை மாறிவிடாமல் தடுக்கும் முயற்சியாக, பெய்ஜிங்கில் ஏற்கனவே, உடற்பயிற்சி கூடங்கள், பொழுது போக்கு இடங்கள் மூடப்பட்டிருப்பதுடன், உணவகங்களுக்குள் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், 15 சதவீத மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் வீடுகளில் இருந்தே … Read more