கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் மக்கள்: WHOவின் அதிர்ச்சியூட்டும் தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸால் சர்வதேசமும் அதிர்ந்து போன நிலையில், அதன் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனாவின் களியாட்டம் இன்றும் தொடர்கிறது என்றாலும் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. கோவிட் தடுப்பூசி, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு என பல காரணிகள் கொரோனாவின் தாக்கத்தையும் பலி எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. ஆனால் உண்மையில் உலகில் கோவிட் இறப்பு எண்ணிக்கை பதிவாகியதை விட மூன்று மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு (World … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க முழு ஆதரவு: நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் உறுதி

பாரீஸ்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர ஆதரவு தெரிவிப்போம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார். அணுசக்தி மூலப் பொருட்கள் விநியோகிக்கும் நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா நுழையவும் ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் சென்ற … Read more

சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து – இஸ்ரேலில் 3 பேர் பலி

டெல் அவிவ்: இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினர். இந்த  தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் தாக்குதல் … Read more

உகாண்டாவில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். போர்ட் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.  நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பஸ் உருக்குலைந்து … Read more

ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்தும் சீன ராணுவம்| Dinamalar

பீஜிங்:திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, ஹிந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2020 மே மாதம் லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை, இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து சிக்கிம், அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதிகளில், ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்த சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தியா – திபெத் எல்லையோர நிலவரங்களை சுலபமாக அறியவும், உளவு பார்க்கவும் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் … Read more

துணை சபாநாயகர் தேர்தல் இலங்கை அரசுக்கு வெற்றி| Dinamalar

கொழும்பு:இலங்கை பார்லி., துணை சபாநாயகர் தேர்தலில், ஆளும் கட்சி ஆதரவு வேட்பாளர் ரஞ்சித் சியம்பலபிட்டியா வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, கடும் நெருக்கடிக்கு இடையிலும் தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நிரூபித்துள்ளார்.அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இலங்கை சிக்கியுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.இதற்கிடையே ஆளும் கூட்டணியைச் சேர்ந்த, முன்னாள் … Read more

சீனாவில் வலுக்கட்டாய கொரோனா பரிசோதனை| Dinamalar

பீஜிங்:சீனாவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆட்சேபணை தெரிவித்த பெண், வலுக்கட்டாயமாக பரிசோதிக்கப்பட்ட காட்சி வேகமாக பரவி வருகிறது.சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.தலைநகர் பீஜிங்கில் உள்ள அனைவருக்கும் வாரத்துக்கு மூன்று முறை கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, தொற்று பரவலை விட, பரிசோதனைக்கும், ஊரடங்கிற்குமே மக்கள் அதிகம் … Read more

இணைந்து செயல்பட இந்தியா, பிரான்ஸ் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்-உக்ரைன் – ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதன் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க, இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதிக் கட்டமாக, பிரான்சின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானை நேற்று முன்தினம் … Read more

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா., தகவல்| Dinamalar

ரோம்:கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:உள்நாட்டு போர், தட்பவெப்ப மாற்றம், கொரோனா பரவல் ஆகியவை, லட்சக்கணக்கானோரை போதிய உணவு கிடைக்காத நிலைக்கு தள்ளியுள்ளது.கடந்த, 2021ல் உள்நாட்டு போர் நடக்கும் தெற்கு சூடான், சிரியா, ஏமன், காங்கோ, ஆப்கன், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட, 53 நாடுகளில், 19 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன், ரஷியா போரை நாங்கள் ஆதரிக்கவில்லை – பெலாரஸ் அதிபர் விளக்கம்

6.5.2022 12.35: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக  பெலாரஸ் அரசும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.  இந்நிலையில், ரஷிய, உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.  எவ்வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன்- ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.