மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் பிரசவத்தில் கழுத்து துண்டாகி சிசு பலி| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில், அனுபவம் இல்லாத டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் செய்த பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் இருந்த சிசு, கழுத்து துண்டாகி உயிரிழந்தது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் ஹிந்து பெண், பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கிருந்த கிராம மருத்துவ மையத்துக்கு சென்றுள்ளார்.மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த வேறு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், பிரசவம் பார்த்துள்ளனர். போதிய அனுபவம் இல்லாத ஊழியர்கள், பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் … Read more

இலங்கையில் பார்லி., கூடும் நாள் குறைப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பார்லி., கூட்டத்தை, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதனால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல பார்லி., கூட்டமும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை பார்லி., கூட்டம் துவங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் சஜித் பிரேமதாசா, அனுரா குமாரா திசநாயகே ஆகியோர் பேசினர். அப்போது, ‘தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு … Read more

உலகின் மிகப் பெரிய ஆற்று மீன் சிக்கியது| Dinamalar

பாங்காக்:உலகிலேயே மிகப் பெரிய ஆற்று மீன், கம்போடியாவில் சிக்கியுள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள மிகாங் ஆற்றில், ஒரு மீனவரின் வலையில் ‘ஸ்டிங்ரே’ எனும் பிரமாண்டமான திருக்கை மீன் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்ததும், ‘மீகாங் அதிசயங்கள்’ அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் விரைந்து வந்து மீனை ஆய்வு செய்தனர்.இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் ஸெப் ஹோகன் கூறியதாவது:உலகிலேயே ஆற்று நீரில் வாழும் மிகப் பெரிய திருக்கை மீன் கம்போடியாவில் கிடைத்துள்ளது. இது, 13 … Read more

ஒற்றுமையை ஏற்படுத்தும் யோகா ஐ.நா., பொது சபை தலைவர் பாராட்டு| Dinamalar

நியூயார்க்:”ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை தரும், ஒற்றுமையை ஏற்படுத்தும் வலிமை யோகாவுக்கு உள்ளது,” என, ஐ.நா., பொது சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்தார். எதிர்காலம்எட்டாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், இதற்கான ஏற்பாடுகளை, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.பல நாடுகளின் துாதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஐ.நா., பொது சபையின், 76வது கூட்டத்தின் தலைவராக உள்ள, மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் … Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் உயிர் பிழைத்தார்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சில், அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இந்தியர், 18 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் லால்டேலு ராம் ஹர்கேஷ், 52. இவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ‘போர்மேனாக’ பணியாற்றி வருகிறார்.இவருக்கு சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வாயு தொல்லை என நினைத்து உதாசீனப்படுத்தினார். சில நாட்களுக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்களை அணுகிய போது, சந்தேகத்தின் … Read more

ஒரே நாளில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்| Dinamalar

ராஞ்சி,:ஜார்க்கண்ட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜார்க்கண்ட்டின் பாண்டா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் ஓரான் என்பவர், அதே ஊரில் வசிக்கும் குசும் லக்ரா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தார். இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், சந்தீப் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த சுவாதி குமாரி என்ற பெண் மீது சந்தீப் … Read more

மாலத்தீவு யோகா நிகழ்வில் வன்முறை| Dinamalar

மாலே:தெற்காசிய நாடான மாலத்தீவில், இந்திய துாதரகம் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைநகர் மாலேவில் நடந்த யோகா நிகழ்வில், துாதரகம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட, 150க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது, மைதானத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், யோகாவில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. வன்முறையில் ஈடுபட்டோரை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், ‘பெப்பர் ஸ்பிரே’ ஆகியவற்றை பயன்படுத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

வேட்டையாட வந்தவரை வேட்டையாடிய கரடி.. பழிக்கு பழித்தீர்த்த சம்பவம்.!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் தன்னை வேட்டையாட வந்தவரை கரடி திடீரென்று பாய்ந்து தாக்கி கொன்றுள்ளது. 62 வயதுடைய வேட்டைக்காரர், துலுன் மாவட்ட வனப்பகுதிக்குள் சென்று கரடியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினார். கரடி இறந்துவிட்டதாக நம்பி, மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரர் அதன் அருகில் சென்று பார்த்தார். அப்போது, இறந்தது போல் நடித்த கரடி, திடீரென்று பாய்ந்து வேட்டைக்காரரை தாக்கி பழிக்குப் பழி தீர்த்து கொன்றது. பின்னர், அந்த கரடியையும் அதே இடத்தில் உயிரிழந்தது. Source link

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான் கடற்படை படகு; எச்சரிக்க துப்பாக்கிச்சூடு

தெஹ்ரான், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தினமும் பல கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் வழியாக அரபிக்கடலில் பயணம் மேற்கொள்கிறது. இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் அதேபகுதியில் பயணம் மேற்கொள்கின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் இன்று வழக்கபாக பயணித்துக்கொண்டிருந்தன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பலும் உடன் பயணித்து. பாரசீக வளைகுடாவின் ஸ்ரிட் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் … Read more

சீனாவின் பெய்டெய்ஹே நகரத்திற்குள் டெஸ்லா கார்கள் நுழைய தடை.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்தி வெளியீடு!

சீனாவின் கடற்கரை நகரமான பெய்டெய்ஹேவிற்குள் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை டெஸ்லா கார்கள் நுழைய தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெபே மாகாணத்தில் ஜூலை இறுதியில் தொடங்கும் கோடைக்கால உச்சி மாநாட்டில் டெஸ்லா கார்களில் பொருத்தப்பட்டுள்ள 8 கேமராக்கள், மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் மூலம் உளவு பார்க்கப்படலாம் என்பதால் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக … Read more