இணைந்து செயல்பட இந்தியா, பிரான்ஸ் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்-உக்ரைன் – ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதன் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க, இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதிக் கட்டமாக, பிரான்சின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானை நேற்று முன்தினம் … Read more

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா., தகவல்| Dinamalar

ரோம்:கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:உள்நாட்டு போர், தட்பவெப்ப மாற்றம், கொரோனா பரவல் ஆகியவை, லட்சக்கணக்கானோரை போதிய உணவு கிடைக்காத நிலைக்கு தள்ளியுள்ளது.கடந்த, 2021ல் உள்நாட்டு போர் நடக்கும் தெற்கு சூடான், சிரியா, ஏமன், காங்கோ, ஆப்கன், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட, 53 நாடுகளில், 19 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன், ரஷியா போரை நாங்கள் ஆதரிக்கவில்லை – பெலாரஸ் அதிபர் விளக்கம்

6.5.2022 12.35: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக  பெலாரஸ் அரசும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.  இந்நிலையில், ரஷிய, உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.  எவ்வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன்- ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

கோடையில் இன்னொரு கொரோனா அலை… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கத் தவித்து வந்த உலக நாடுகள், அதன் மூன்று அலைகளில் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலி கொடுத்துலிட்டது. பொதுமுடக்கம், தடுப்பூசி என தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக உலக நாடுகள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ள நிலையில், உலக மக்களின் தூக்கத்தை கலைக்கும் விதமான அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. .கோடை காலத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை … Read more

மரியுபோலில் இருந்து 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு – அதிபர் ஜெலென்ஸ்கி.!

மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்காலையில் பதுங்கி இருந்த 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அங்கு மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில் … Read more

உக்ரைன் – ரஷியா போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை – பெலாரஸ் அதிபர்

மின்ஸ்க், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. போர் இன்று 71-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் – ரஷியா … Read more

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், திடீரென சவப்பெட்டியை தட்டியதால் பரபரப்பு..

பெரு நாட்டில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியை தட்டிய நிகழ்வு நடந்துள்ளது. லம்பேக் (Lambayque) நகரை சேர்ந்த ரோசா இசபெல் (Rosa Isabel) என்ற பெண் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இசபெல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதையடுத்து,இறுதிச்சடங்கிற்காக இசபெல்லின் உடலை சவப்பெட்டியில் வைத்து அவரது உறவினர்கள் இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென ரோசா இசபெல் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, அவரது … Read more

வைரசே பரவாயில்லை.. கட்டுப்பாடுகள் போட்டு வதைக்காதீர்கள்: கதறும் சீன முதியவர்கள்!| Dinamalar

ஷாங்காய்: புதிய கோவிட் ரகங்களை தடுக்க முடியாது, ஊரடங்கு நீண்ட காலத்திற்கு சரிவராது, சாலைகளில் கிருமிநாசினிகள் தெளிப்பது பயனற்றது என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறுகின்ற போதும் சீன கம்யூனிஸ்ட் அரசு கோவிட்டை பூஜ்ஜியமாக்குவேன் என அடம்பிடித்துக் கொண்டு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒமைக்ரான் பரவல் அதிகம் காணப்பட்டது. மே 4 வரை ஒமைக்ரான் தொற்றால் 491 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 80, 90 வயதினர் … Read more

நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்… இன்னும் பயிற்சியில் தேர்ச்சியடையவில்லை – நடுவானில் பீதியை கிளம்பிய விமானி…!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஹித்ரோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நோக்கி  கடந்த 2-ம் தேதி வெர்ஜின் அட்லாண்டிகா விமான நிறுவனத்தின் ஏ330 ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 300 பேர் பயணித்தனர். விமானத்தை விமானி மற்றும் துணை விமானி இயக்கினர். விமானம் புறப்பட்டு 40 நிமிடத்தில் அயர்லாந்து வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது. விமானத்தை 17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட விமானி இயக்கினார். அதேவேளை துணை விமானி 2017-ம் ஆண்டு தான் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அனைத்து வகையிலும் முயற்சி – பெலாரஸ் அதிபர்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் இவ்வளவு நாள் நீட்டிக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் இந்த போரை பெலாரஸ் ஏற்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து, இம்மாத தொடக்கத்தில் பெலாரஸ் படைகள் ரஷ்ய படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டது குறித்து பேசிய அவர், … Read more