இலங்கையில் 50 நாட்களை கடந்த அதிபருக்கு எதிரான போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு,-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி, நேற்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல பிரச்னைகளால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏப்., 9ல் … Read more

நைஜீரியாவில் சோகம் – சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.  இதுதொடர்பாக, மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறுகையில், … Read more

சீனாவில் கன மழை: 15 பேர் பலி| Dinamalar

பீஜிங் : சீனாவில் கன மழையால் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் மாயமான மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவின் தெற்கு பகுதியில் மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புஜியான் மாகாணத்தில் பெய்த மழையால், ஒரு கட்டடம் இடிந்து எட்டு பேர் உயிரிழந்தனர். யுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் இறந்தனர். குவான்க்ஸி என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட … Read more

உக்ரைனில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனிய நகரமான லைமனை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுக்கள், சீவிரோடோனெட்ஸ்கிற்கு மேற்கே உள்ள ரயில்வே மைய நகரமான லைமனை கைப்பற்றியதாக கூறியிருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட உக்ரைன் அதிகாரிகள், லைமனுக்கு அருகில் இருக்கும் ஸ்லோவியன்ஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து வருவதாக கூறியுள்ளனர். Source link

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணை: ரஷ்யா வெற்றிகரமாக சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. ஒலியை விட 9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், பேரண்ட்ஸ் கடலில் இருந்து இன்று(மே 28) ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வகையான ஏவுகணை … Read more

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அதன் தெற்கு கிழக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. மூன்று மாதத்துக்கு மேல் போர் நீடிக்கும் நிலையில், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் … Read more

இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி 50 நாளை கடந்தும் தொடரும் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதற்கிடையே, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நிதித்துறை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு செய்து வருகிறது. புதிய … Read more

பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் டிக்கெட் பணம் வாபஸ்- கப்பல் நிர்வாகம் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பெர்முடா முக்கோணத்தில் தங்கள் சொகுசு கப்பல் காணாமல் போனால் பயணிகளின் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படுமென அமெரிக்க கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இணையத்தில் நகைப்புக்குள்ளாகி உள்ளது. அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா முக்கோணம் உலகின் மர்மமான முக்கோணமாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த முக்கோணத்தில் ஏலியன்கள் வசித்து வருவதாகவும் இதனை கடக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் அமெரிக்க செய்தி ஊடகம் … Read more

மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்

இந்தோனேஷியாவில் 23 வயது இளம் பெண் ஒருவர் மரணக்கிணற்றில் பைக் ஓட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். கமிலா புர்பா என்ற அந்தப்பெண் மரத்தால் செய்யப்பட்ட மரண கிணற்றின் சுவற்றில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். திருவிழா ஒன்றின் போது இந்த சாகச விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தான் சாகச பயிற்சியை ஆம்பித்த போது அதில் வேறு பெண்கள் யாரும் இல்லாததால், வித்தியாசமாக இருக்கவும், யாரும் செய்யாத ஒன்றை செய்யவும் விரும்பியதாக கமிலா தெரிவித்தார். … Read more

எரிபொருள் விலை உயர்வுக்கு இம்ரான்கான் அரசே காரணம் – பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால் அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. தற்போதைய சூழலில் சர்வதேச … Read more