துருக்கி நாட்டின் பெயர் துர்க்கியே என மாற்றம்.. துர்க்கியே நாட்டின் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!

துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பபை அங்கீகரிக்கப்படுத்தும் வகையில், தேசத்தின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்றி அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்தார். துர்க்கியே என்ற வார்த்தை அந்நாட்டின் கலாசாரம், நாகரீகம் உள்ளிட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. துர்க்கியேவின் பெயற் மாற்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆண்டானியோ குட்ரெஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  Source link

அமெரிக்காவில் தேவாலயம் அருகே 2 பெண்கள் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் மெஸ் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு வெளியே நேற்று இரவு 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வாலிபர் ஒருவர் 2 பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். bhbhஇதில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வில்லை. துப்பாக்கியால் சுட்ட நபரின் விவரமும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

அமெரிக்கா: இறுதிச்சடங்கு நிகழ்வில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிலையில், விஸ்கான்சின் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிற்பகல் 2:26 மணிக்கு கிரேஸ்லேண்ட் கல்லறையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில் கடந்த … Read more

இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு.. மக்கள் பலர் படுகாயம்..!

அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவராத நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   Source link

செனகலில் இந்திய வம்சாவளியினரை சந்தித்தாா் துணை ஜனாதிபதி

டக்கா், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துணை ஜனாதிபதி காபோன் நாட்டில் தனது சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு, செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்கு சென்றாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை … Read more

ஜானி டெப்புக்கு இழப்பீடு செலுத்தும் நிலையில் அம்பர் ஹெர்ட் இல்லை – வழக்கறிஞர்

அவதூறு வழக்கில் முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு 10 புள்ளி 35 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நடிகை ஆம்பர் ஹெர்டுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரால் இத்தொகையை செலுத்த இயலாது என்று அவர் வழக்கறிஞர் Elaine Charlson தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பால் அம்பர் ஹெர்ட் சோகமாக இருப்பதாகவும் இது பெண்களுக்கு எதிரான தீர்ப்பாக இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.  Source link

மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

மனகுவா நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார். இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் போதை தலைக்கேறி சகோதரர்கள் ரகளை.. சகோதரர்களுக்கு அபராதம், வாழ்நாள் தடை..!

கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில், நடுவானில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மற்றொருவர் மீது சீறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர். சகோதரர்களின் சண்டையில் விமானம் Corfu விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க … Read more

விசித்திர சம்பவம்: தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர … Read more

துப்பாக்கி கலாச்சாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை.. துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த நடவடிக்கை..!

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மையில் 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி கலாச்சாரம் வளர்வது குறித்து கவலை தெரிவித்த ஜோ பைடன், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும், அது முடியாவிட்டால் சிறுவர்களைப் பாதுகாக்க அதன் வயது வரம்பையாவது உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளிக்கோ … Read more