கம்போடிய தலைவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரம்: தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

பேங்காக்: கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நடத்திய தொலைபேசி உரையாடல் கசிந்ததை அடுத்து, அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை தகராறு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில், பதட்டத்தை தணிக்கும் நோக்கில், கம்போடிய முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் … Read more

2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு

டோக்கியோ, 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து … Read more

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்; 3 பேர் பலி

காபுல், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்துவதாகவும் இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதாக … Read more

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல என்று வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகர் பீட்டர் நவரோ, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர இந்தியாதான் நிதி உதவி அளிக்கிறது என குற்றம் சாட்டி நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். … Read more

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளி: பிரதமர் மோடி

டோக்கியோ: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம் வருமாறு: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை … Read more

அமெரிக்க விமானப்படையின்  எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது. விமானி பாராசூட் மூலம் தப்​பி​னார். அமெரிக்க விமானப்​படை​யின் எப்​-35 போர் விமானம் அலாஸ்கா விமானப்​படைத்​தளத்​தில் இருந்து நேற்று வழக்​க​மான பயிற்​சிக்கு புறப்​பட்​டது. அப்​போது மைனஸ் 18 டிகிரி குளிர் நில​வியது. வானில் வெற்​றிகர​மாக பறந்த விமானம் தரை​யிறங்​கும் போது, அதன் சக்​கரங்​கள் முழு​வது​மாக வெளி​யேற​வில்​லை. அதில் உள்ள ஹைட்​ராலிக் பைப்​களில் பனிக்​கட்டி படிந்​திருந்​த​தால் இந்த … Read more

ரஷியா – உக்ரைன் போருக்கு மோடிதான் காரணம் – அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பிதற்றல்

இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. … Read more

அதிவேகமாக காரை ஓட்டிய துருக்கி போக்குவரத்து மந்திரிக்கு அபராதம்

அங்காரா, துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல்காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஒட்டி கொண்டு சென்றார். அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தை கேட்டபடி சென்றார். மேலும் காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்தநிலையில் நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் … Read more

புதின், கிம் ஜாங் உன் உள்பட 26 வெளிநாட்டு தலைவர்கள் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம்

பெய்ஜிங், சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ … Read more

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டிகள் தவிப்பு

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் போர் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் ரஷியா மீது உக்ரைன் ராணுவம் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரஷியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து இந்த பொருளாதார … Read more