ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் – 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாடு பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்த்து கொண்டுள்ளது. அந்த எல்லை பகுதிகளில் தெக்ரிக்-இ-தலீபான் பாகிஸ்தான்(TTP) என்ற அமைப்பு அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் தெக்ரிக்-இ-தலீபான் அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உள்பட பல வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கிடையே கடந்த 11, 12-ந்தேதிகளில் ஆப்கானிஸ்தானின் தலீபான் அமைப்பினரும், … Read more

சீனாவுக்கு உளவு வேலை… இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது

விர்ஜீனியா, அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின வியன்னா நகரில் வசித்து வருபவர் ஆஷ்லே டெல்லிஸ் (வயது 64). இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோத வகையில் பதுக்கி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவருடைய வீட்டில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட முக்கிய ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இது அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுதவிர சமீப ஆண்டுகளில் பல முறை சீன … Read more

ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. புதினை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நேற்று வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியிலும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: “புதினுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். … Read more

கட்டுரையில் புகழ்ச்சி… அட்டை படத்தில் காலை வாரிய செய்தி நிறுவனம்; கடும் கோபம் கொண்ட டிரம்ப்

வாஷிங்டன் டி.சி., ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக, 2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இந்நிலையில், டிரம்பை புகழும் வகையில் டைம் செய்தி நிறுவனம், அட்டையில் அவருடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், காசாவில் பிடித்து வைக்கப்பட்ட பணய கைதிகள், டிரம்பின் … Read more

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா

நியூயார்க், உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான் என 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ஹரீஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள். … Read more

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். இஸ்​ரேல் ராணுவம் – பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் தேதி போர் நிறுத்​தம் … Read more

சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக… இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

ஷாங்காய், வெளிநாடுகளுக்கு சென்று மேல் படிப்பை படிக்கும் இந்திய மாணவர்களின் விருப்ப தேர்வாக உள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று. அந்நாட்டின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியின்படி, எம்.பி.பி.எஸ். படிப்புகளை தொடர்வதற்காக இந்திய மாணவர்கள் அதிக அளவில் சீனாவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், சீனாவில் இந்தியை படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, பல்கலைக்கழக அளவில் சர்வதேச படிப்புகளுக்கான துறைகளில் இந்தியும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் உள்ள பள்ளிகளிலும் இந்தியை … Read more

மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டம்: அதிபர் தப்பியோட்டம்

அண்டனானரீவோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது. மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக … Read more

பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி… டிரம்ப் அளித்த பதில் என்ன?

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நிருபர்கள் அவரை சூழ்ந்தனர். அவரிடம் பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாலஸ்தீன நாட்டுக்கு நீங்கள் அங்கீகாரம் தருவீர்களா? என அப்போது கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒற்றை நாடு, இரட்டை நாடு அல்லது 2 நாடு என்பது பற்றியெல்லாம் நான் பேசவில்லை. நாங்கள் காசாவை … Read more

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

புதுடெல்லி: மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியிருப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான … Read more