7வது குழந்தைக்கு தாயாகும் பிரபல நடிகரின் மனைவி| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ்-அமெரிக்க நடிகர் அலெக் பால்ட்வினுக்கு, ஏற்கனவே ஆறு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான அலெக் பால்ட்வின், 63, நடிகை கிம் பசிங்கரை 1993ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, அயர்லேண்ட் எலிசி பால்ட்வின், 26, என்ற ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதி, 2002ல் விவாகரத்து பெற்றனர்.பின், 2012ல், அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா, 38, என்பவரை திருமணம் செய்தார். … Read more

ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ

  பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான்  முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  உடன்பாடு ஒன்றை எட்டிய நிலையில் இம்ரான் கானிற்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.  முன்னதாக,  இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்த நிலையில்,  ட்வீட் செய்த PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் MQM ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் … Read more

சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோ அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனிதர்களை போன்று இரு கால்களில் இயங்கக் கூடிய வகையிலும் அதேபோல் சட்டென நான்கு கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஊர்ந்து செல்லும் வகையிலும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் 100 கிலோ வரை எடையை கையாளும் வகையில் ரோபோ மேம்படுத்தப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  Source link

விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை| Dinamalar

சியோல்-உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி, தென் கொரியா சாதனை படைத்துள்ளது. கிழக்காசிய நாடுகளான தென் கொரியா – வட கொரியா இடையே எப்போதும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா … Read more

இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.   இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 184 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   முன்களப் பணியாளர்கள் … Read more

ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை| Dinamalar

தஞ்சாவூர்,- ”திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார். ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் … Read more

நியூ கலிடோனியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 2.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  நியூ கலடோனியா தீவிற்கு அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…நாங்கள் அப்பாவி அல்ல: படைகளை … Read more

இலங்கையில் மின் வெட்டு 10 மணி நேரமாக உயர்வு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் வெட்டு நேரம், 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுஉள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.எரிபொருள் பற்றாக்குறையால், நீர் மின் நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், மின்சார வினியோகம் தடைபட்டு, தினமும் ஏழு மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தது. இந்நிலையில், … Read more

பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடனான கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம்., கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான் கான், பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மீதான ஓட்டெடுப்பு ஏப்., 3-ம் … Read more