400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்| Dinamalar

லீவ்,-உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற போராடி வரும் ரஷ்ய ராணுவம், அங்குள்ள பள்ளி கட்டடத்தை ஏவுகணை வீசி தாக்கியது. இந்தக் கட்டடத்தில், 400 பேர், பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போரில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர் எனக் கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து, 34 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வார … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 26-வது நாள்: நடுநிலையை கைவிட்டு ஆதரவளிக்க வேண்டும்- இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தல்

21-03-2022 1.50: ரஷியா விவகாரத்தில் நடுநிலையை கைவிட்டு தங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார். தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20-03-2022 23.50: உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை, போரை … Read more

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க சீனா மறுப்பு

வாஷிங்டன்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு சீனா பொருள் உதவி வழங்கினால், அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடன், சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனும் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அந்நாட்டிற்கான சீன தூதர் கிங் ஆங், ரஷியாவிற்கு எதிராக சீனா தெரிவிக்கும் கண்டனம் … Read more

ஹவுதி பயங்கரவாதிகள் சவுதி மீது திடீர் தாக்குதல்| Dinamalar

துபாய்-ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் அமைப்பு, தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவன வளாகங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, சவுதி அரேபியா கூறியுள்ளது. மேற்காசிய நாடான ஏமனில், அரசுக்கும், ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2014ல் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படைகளுக்கு, சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக … Read more

இஸ்ரேல் பிரதமர் பென்னட் ஏப்., 2ல் இந்தியா வருகை| Dinamalar

புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், அரசு முறைப் பயணமாக ஏப்., 2ல் இந்தியா வருகிறார். மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்தலி பென்னட், அக்., மாதம் கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா., காலநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.இதையடுத்து பிரதமர் நப்தலி பென்னட், ஏப்., 2ல் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இரு நாடுகள் … Read more

'மூன்றாம் உலகப் போர் உருவாகும்!' – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால், அது தோல்வி அடைந்தால், மூன்றாம் உலகப் போராகவே அர்த்தம் கொள்ளப்படும் என, உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த மாதம் 24 ஆம் தேதி அந்நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 25வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் … Read more

கிழக்கு உக்ரைனில் பல நகரங்களில் ரஷ்யப் படைகள் முற்றுகை – பிரிட்டன் உளவுத்துறை அறிக்கை

கிழக்கு உக்ரைனில் பல நகரங்களை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் ரஷ்யப் படைகள் ஓரளவே முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த நகரங்களின் மீது சரமாரியாகக் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருவதன் விளைவாக அங்குப் பேரழிவும், பெருமளவில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யத் தாக்குதலில் 115 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 140க்கு மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.  Source link

இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது. இந்த தகவலை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசினார். கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இம்ரான் கான் பேசியதாவது:- அண்டை நாடான இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதால் அதை பாராட்ட விரும்புகிறேன். குவாட் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியா, அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷியாவிலிருந்து எண்ணெய் … Read more

உலக நாடுகளின் தடைகளை மீறி அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை

எதிரி நாட்டு இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தக்கூடிய ராக்கெட் லாஞ்சரை வட கொரிய ராணுவம் சோதனையிட்டது. இந்தாண்டு தொடக்கம் முதல் வட கொரிய ராணுவம் பல்வேறு கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வருவதால், கொரிய தீபகற்பகத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. தெற்கு பியோங்கன் மாகாணத்தில் (South Pyongan Province) நடைபெற்ற ராக்கெட் லாஞ்சர் ஏவுகணை சோதனையின் எதிரொலியாகத் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அவசரமாகக் கூட்டப்பட்டது. Source link

காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தடை விதிப்பதா? நியூசிலாந்து மாஜி துணை பிரதமர் எதிர்ப்பு!| Dinamalar

வெல்லிங்டன்:நியூசிலாந்தில், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட முதலில் அனுமதி அளித்த அந்நாட்டு திரைப்பட தணிக்கை குழு, சில முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தணிக்கையை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு நியூசிலாந்து முன்னாள் துணை பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி உள்ளது.காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினர் 1990களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அங்கிருந்து விரட்டி … Read more