ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்

What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது? 

ஈரானிலிருந்து 290 இந்திய மாணவர்கள் டெல்லியில் தரையிறங்கினர்; 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு!

புதுடெல்லி: போர் பதற்றம் நிறைந்த ஈரானின் மஷாத் நகரிலிருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது வான்வெளியை திறந்துள்ளது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து மஹான் ஏர் நிறுவனத்தின் … Read more

தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது. அதன்படி கடந்த ஒரு நாளில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் தைவான் எல்லையில் கண்டறியப்பட்டன. அவற்றில் 60 விமானங்கள் எல்லையைக் … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?

இஸ்லாமாபாத்: அமெரிக்க நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து விரிவாக பார்ப்போம். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதில் அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்பிலும் … Read more

முன்னாள் மாணவனுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. ஆசிரியை சஸ்பெண்ட்

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியையாக எலினோர் லூயிஸ் (வயது 34) என்பவர் 2017-ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவனுடன் அவர் நன்கு பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் ஆன்லைன் மூலம் தினமும் அவர்கள் பேசி மேலும் நெருக்கமாகினர். இதனையடுத்து … Read more

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி: இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் – 32 பேர் காயம்

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது. சொரோகா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைக்கு பலத்த … Read more

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

ஒட்டாவா டெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் உயர் படிப்புக்காக கனடா சென்றார். அங்குள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ளது. மாணவி தன்யா தியாகி இறந்தது தொடர்பாக வான்கூரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு … Read more

3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை

வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் … Read more

சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு

பெய்ஜிங், சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய சீனா மற்றும் தென் சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் லிசூய் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாதுகாப்பு அளவைத் தாண்டி 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடுவதால், கரையோரங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதே போன்று, ஹுபே மாகாணத்திலும், ஏராளமான … Read more

ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

டெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன. கடந்த 13-ம் தேதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் … Read more