உலக செய்திகள்
மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அவதி <!– மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் … –>
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச் சரிவு, சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, நாளை கரையை கடக்கும் போது ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளை அண்மையில் தாக்கிய அனா புயலை விட அதிக சேதங்களை … Read more
துாதரக கழிப்பறையில் ரகசிய கேமரா | Dinamalar
பாங்காக்,-தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகத்தில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக். இங்கு ஆஸ்திரேலிய துாதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த துாதரகத்தின் பெண்கள் கழிப்பறையில் கேமரா பதிவு செய்யும் படங்களை சேமிக்க உதவும் ‘கார்டு’ இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதை தொடர்ந்து துாதரகங்களில் உள்ள கழிப்பறைகளில் சோதனை நடந்தது. அப்போது பெண்கள் கழிப்பறையில் உளவு … Read more
நைஜீரியாவில் வேகமாக பரவும் லாஸ்சா வைரசுக்கு 40 பேர் உயிரிழப்பு <!– நைஜீரியாவில் வேகமாக பரவும் லாஸ்சா வைரசுக்கு 40 பேர் உயிரி… –>
நைஜீரியாவில் பரவி வரும் லாஸ்சா காய்ச்சலால் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரசான லாஸ்சா, 21 முதல் 30 வயது பிரிவினரையே அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 36 மாகாணங்களில் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுத் தலைவலியாக 200-க்கும் மேற்பட்டோருக்கு லாஸ்சா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தது
இகரா: மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் … Read more
மன்ஹாட்டனில் காந்தி சிலை சேதம்; அமெரிக்க போலீஸார் விசாரணை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மன்ஹாட்டன்: அமெரிக்காவின் மன்ஹாட்டனில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அருகே உள்ள யூனியன் ஸ்கொயர் பகுதியில் எட்டு அடி உயர மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்திய-அமெரிக்க தூதரகங்கள் இடையே இச்செய்தி மிகப் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இதுகுறித்து … Read more
அமெரிக்கர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஜோபைடன் அழைப்பு
அமெரிக்காவில் கொரோனா ஆதிக்கம் அமெரிக்க வல்லரசு நாட்டில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 8 லட்சத்துக்கும் அதிகமான ஒருநாள் பாதிப்புகளுடன் உச்சத்தை தொட்ட ஜனவரி மத்தியில் இருந்து, அங்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் 49 மாகாணங்களில் தொற்று சற்றே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 35 மாகாணங்களில் இறப்பு அதிகம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, … Read more
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில் 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று நியூயார்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. காந்தி சிலை … Read more
அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் யவோரிவ்;ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் … Read more
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: உக்ரைன் அணியின் தொடக்க விழாவில் தூங்கிய புதின்…!
பிஜீங், சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவை யொட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வண்ணமிகு வாண வேடிக்கைகடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை மிக உயரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இந்தநிலையில், பெய்ஜிங் … Read more