அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இதில் கனிம வளங்கள் ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசித்தனர். அப்போது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்தனர். இந்த நிலையில் அரபிக் கடலில் புதிய துறைமுகத்தை அமைக்க திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் அதற்காக அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளது.பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை … Read more

பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை வழங்கவில்லை; ரஷியா மறுப்பு

மாஸ்கோ, பாகிஸ்தான் ராணுவம், சீன தயாரிப்பான ஜெ.எப்.17 போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட என்ஜின்களை பாகிஸ்தானுக்கு ரஷியா வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட தோல்வி என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை வழங்குவதாக வெளியான தகவலை ரஷியா மறுத்து உள்ளது. இதுதொடர்பாக ரஷியா தரப்பில் கூறியதாவது:- பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை ரஷியா வழங்குவதாக வெளியான தகவலை நிராகரிக்கிறோம். … Read more

தலைமுடியைப் பிடித்து இழுத்து… இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்!

துருக்கி: சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில, கடந்த புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது அதனை … Read more

ஜப்பானில் இரவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரையோரம் அருகே நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பசிபிக் நெருப்பு வளையத்தில் எரிமலை மண்டலத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி லேசான நிலஅதிர்வுகள் ஏற்படும் நாடாக அறியப்படுகிறது. ஒரு நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் போன்றவை பலமுறை … Read more

அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவர் படுகொலை: தெலுங்கானா முதல்-மந்திரி, முன்னாள் மந்திரி ஆறுதல்

நியூயார்க், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (வயது 27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். இதில், முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார். நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து … Read more

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆகிறார் சனே டகைச்சி

டோக்கியோ: ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்​தெடுக்​கப்​படு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார். அதனால், ஆளும் லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் … Read more

பாகிஸ்தானில் அவலம்; தபாவில் உணவு சாப்பிட சென்ற இந்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்\

கொத்ரி, பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடூர தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்து, கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வேற்றுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன. அந்நாட்டின் சிந்த் மாகாணத்தில், கொத்ரி நகரில் இந்து பாக்ரி சமூக வாலிபரான தோலத் பாக்ரி என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக, சாலையோர தபாவுக்கு சென்றுள்ளார். ஆனால், அந்த தபாவின் உரிமையாளர் மற்றும் மற்றவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து, தோலத்தின் … Read more

குண்டுவீச்சை நிறுத்துமாறு டிரம்ப் கூறிய பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்​டு​வரும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். இதை ஏற்​ப​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு அறி​வித்​தார். எனினும் ஹமாஸ் அமைதி காத்​த​தால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்​தார். இந்​நிலை​யில் அமை​திக்கு ஹமாஸ் தயா​ராக இருப்​ப​தாக​வும் பிணைக் கைதி​களை விடுவிக்க ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக​வும் பிற நிபந்​தனை​கள் சில​வற்றை ஏற்​றுக்​கொண்​டுள்​ள​தாக​வும் ட்ரம்ப் அறி​வித்​தார். மேலும் காசா மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக்கொண்டார். … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் பொலே (வயது 27). இவர் ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவம் படித்தார். பின்னர், 2023ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் மேல் படிப்பு மேற்கொண்டு வந்தார். இதனிடையே, அவர் பகுதி நேரமாக டெக்சாசின் டெல்லஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சந்திரசேகர் இன்று இரவு (அந்நாட்டு நேரப்படி) பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்தார். … Read more

உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா தாக்குதல்

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 317வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் … Read more