‘இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார். … Read more

அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு … Read more

“ஈரான் ஒருபோதும் சரணடையாது” – ட்ரம்ப்புக்கு அயதுல்லா அலி கமேனி பதிலடி

தெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார். தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறும்போது, “ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதேபோல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். திணிக்கப்பட்டால் … Read more

‘வாட்ஸ்அப் செயலியை செல்போனிலிருந்து நீக்குங்கள்’ – குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தெஹ்ரான்: சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய ராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதனையடுத்து, ​​வாட்ஸ்அப் உட்பட சில செயலிகள் மற்றும் … Read more

நாளுக்குநாள் தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 585 பேர் உயிரிழப்பு; 1326 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரையிலான சேதங்களே அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், 6-வது நாளான இன்று இஸ்ரேல் தனது தாக்குதலை இன்னும் அதி தீவிரமாக்கியுள்ளது. 585 பேர் உயிரிழப்பு: ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் முழுவதும் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் … Read more

ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன்..?

டெஹ்ரான், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல.. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த போர் மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தற்போது வரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட … Read more

‘இனி இரக்கத்துக்கு இடமில்லை’ – அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டலுக்கு கமேனி எதிர்வினை

தெஹ்ரான்: ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, … Read more

டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும் – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்

டெஹ்ரான், தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவியது. இரு நாடுகளிடையே மோதல் தீவிரம் அடைந்திருப்பதால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அல்​பாட்டா: கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். பிரதமர் நரேந்​திர மோடி, 3 நாடு​களுக்​கான 5 நாள்​கள் அரசு​முறைப் பயணத்​தின் முதல் கட்​ட​மாக, மத்​தி​ய தரைக் கடல் பகுதியில் அமைந்​துள்ள தீவு நாடான சைப்​ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்​றார். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து திங்​கள்​கிழமை மாலை புறப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்​றடைந்​தார். கனடா​வின் அல்​பாட்டா நகரிலுள்ள கால்​கரி விமான​ நிலை​யத்​தில் அந்​நாட்டு அரசுத் தரப்​பில் … Read more

இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

ஒட்டாவா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் (உள்ளூர் நேரப்படி) நடந்தது. கனடா பிரதமர் மார்க் கார்னி … Read more