‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம்; ஆனால் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது’ – ஜெலன்ஸ்கி

நியூயார்க்: இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவிக்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, “இந்தியா பெரும்பாலும் எங்களுடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விகள் இருக்கின்றன. ஆனால், அதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். … Read more

ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு… பதறவைக்கும் வீடியோ – 14 பேர் பலி

Super Typhoon Ragasa: ரகாசா சூப்பர் சூறாவளியால் தைவானின் ஹுவாலியன் கவுண்டியில் ஏரி உடைந்து, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பாயந்தோடும் வெள்ளப்பெருக்கின் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே. அவர் எங்களை … Read more

தைவானை புரட்டிப் போட்ட அதி தீவிர புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி; 124 பேர் மாயம்

தைபே: தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர். ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் … Read more

எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு: அமெரிக்கா பரிசீலனை

வாஷிங்டன், அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட … Read more

காப்பகத்தில் டீன்-ஏஜ் சிறுவனின் பாலியல் உணர்வை தூண்டி உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் உதவி மேலாளர்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் செயின்ட் ஹெலன்ஸ் என்ற இடத்தில் உள்ள லிங்மெல் அவென்யூ பகுதியில் குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டது. பல சர்ச்சைகளால் அது மூடப்பட்டு உள்ளது. இதில், டீன்-ஏஜ் சிறுவனான மகனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டனர் என காப்பக பெண் பணியாளர்களுக்கு எதிராக சிறுவனின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடந்தது. நீதிபதி பிரையன் கும்மிங்ஸ் முன்னிலையில் தொடர்ந்து பல நாட்களாக இந்த வழக்கு … Read more

“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி” – ஐ.நா சபை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சு

நியூயார்க்: ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அது முதலே தனது அதிரடி நடவடிக்கை மூலம் உள்நாடு மற்றும் உலக நாடுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்தச் சூழலில் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றினார். இதில் உலக … Read more

ஏமன் அருகே பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

ஏஐ தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும்: ஐ.நா. ஆய்வில் தகவல்

உலக அளவில் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மெல்ல மெல்ல மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏஐ-யால் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது. அதாவது, ஏஐ காரணமாக பெரிய அளவிலான வேலை இழப்பு ஏற்படும் அச்சமும் உள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக … Read more

திறன்மிகு வல்லுநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சீனா – ‘கே’ விசா சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

பெய்ஜிங்: சர்வதேச அளவிலான திறன்மிகு வல்லுநர்களை அமெரிக்கா நிராகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அத்தகையவர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூ ஜகுன், “உலகமயமாக்கப்பட்ட உலகில் எல்லை தாண்டிய திறமை பரிமாற்றம் மிகவும் முக்கியமானது. அவர்கள்தான் உலகின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள திறமையானவர்களை சீனா வரவேற்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அவர்கள், … Read more