மியான்மர் அகதிகளுக்கு பாதிப்பா? ஐ.நா. நிபுணர் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா

ஐ.நா. சபையின் சிறப்பு நிபுணர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மியான்மர் மனித உரிமைகள் குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:- இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மியான்மரை சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை என்றாலும், மியான்மரை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகினர். அந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய அதிகாரிகளால் சுமார் 40 மியான்மர் அகதிகள் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர்.கடந்த மே மாதத்தில் இந்திய … Read more

போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டை; பிரேசிலில் 132 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, அவருடைய அரசு போதை பொருள் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அந்நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. … Read more

நேட்டோ தாக்குதலில் உயிர் தப்பிய ரஷிய வீரர்… கையை பிடித்து புதின் கூறிய நெகிழ வைத்த வார்த்தை

மாஸ்கோ, 3 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷியா தன்னுடைய தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாஸ்கோ நகர ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சந்திப்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்றார். போரில் ரஷியா பின்னடைவை சந்தித்து விட்டது என மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. ஆனால், வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதின் இந்த சந்திப்பை நடத்தி தேச பெருமையை அவர்களுக்கு … Read more

சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு

புசான் (தென்கொரியா): தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் … Read more

பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதுபற்றி ரியோ நகர கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ கூறும்போது, போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் … Read more

காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்

நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டியன். வழக்கறிஞரான இவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலியை கோவையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையில், இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோவை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி கிடைக்காத நிலையில், சொந்த ஊரான பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக இருவரும் வந்திருந்தனர். அப்போது இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு … Read more

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், … Read more

சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

கெய்ரோ சூடான் நாட்டில் துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் என மொத்தம் 460 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இது பற்றிய தகவல்களால், ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம் … Read more

சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, … Read more

காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலி

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதன்பின்னர், அமெரிக்கா தலைமையில் நடந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டது. இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், காசா … Read more