பிரேசிலில் கனமழை, நிலச்சரிவு; 23 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனீரோ, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கே கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து, பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியதில் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கடந்த … Read more

பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்

மாலே: சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பதவியேற்றதையடுத்து, இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அந்நாட்டு மந்திரிகள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தனர். மாலத்தீவின் விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிபர் முய்சு கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் நாடு திரும்பினர். எஞ்சியுள்ள வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மேலும் … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-30 ராணுவ வீரர்கள் பலி

கீவ், நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 வருடங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் இன்னும் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. எனினும் போர் நின்றபாடில்லை. மாறாக இரு நாடுகளும் தொடர்ந்து … Read more

லண்டன் | சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி லாரி மோதி பலியான சோகம்

புதுடெல்லி: லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்ற 33 வயதான இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 33 வயதான இந்திய மாணவி செய்ஸ்தா கோச்சார் (Cheista Kochhar) என்பவர் கடந்த வாரம் தனது வீட்டுக்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் பலியானார். அவரது கணவரின் கண்முன்னரே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

கடனில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவு… பிடிவாதத்தை விட்டு இந்தியாவுடன் பேச அதிபருக்கு அறிவுரை!

கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு மோசமாவே உள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றது முதலே முகமது முய்ஸு  இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். 

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல்.. 10 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் … Read more

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு

நைஜீரியாவின் சில பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆயுதக் குழுக்கள் கடத்திச் சென்று மிரட்டும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி கதுனா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. அதன்பின்னர் கடந்த வாரம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த … Read more

அமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய பெண் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷி (வயது 21) என்ற பெண் உயிரிழந்தார். இத்தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- பென்சில்வேனியாவில் மார்ச் 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோஷியின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசிக்கும் புற்றுநோய் பாதிப்பு

லண்டன், இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் (வயது 42). கடந்த 2011-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளவரசியான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒரு வீடியோவாக … Read more

பாகிஸ்தான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.. இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பரிசீலனை

இஸ்லாமாபாத்: ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்தது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான வர்த்தக உறவை நிறுத்தியது. அதன்பின் வர்த்தக உறவை தொடருவதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது இஷாக் … Read more