Beijing Will Reunify Taiwan: Xi Jinping Warns Biden | தைவானை பீஜிங் மீண்டும் இணைக்கும்: சீன அதிபர் ஜி ஜின்பிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: தைவானை சீனாவின் பிரதான நிலப்பரப்புடன் பீஜிங் மீண்டும் இணைக்கும் என ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. … Read more

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு

பீஜிங், வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 127 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி … Read more

மாயமான எம்எச்-370 விமானத்தின் பெரிய பாகத்தை கண்டுபிடித்தேன்.. ஆஸ்திரேலிய மீனவர் சொல்கிறார்

சிட்னி: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை … Read more

பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிய இந்தியா காரணம் அல்ல – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் கலந்துரையாடும் போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது: பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழியக் காரணம் இந்தியா அல்ல, ஏன், அமெரிக்காவோ ஆப்கன் கூடஅல்ல. நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018 ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசியல் … Read more

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் செங்கடல் பகுதியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த போரில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், தங்களை இணைத்துக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். செங்கடல் பகுதியில் வரக்கூடிய இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் வர்த்தக தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிகிறது. … Read more

US court rules Donald Trump ineligible to run for president | அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, ‘பிரைமரி’ எனப்படும், முதன்மை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர்’ என, அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கடந்த 2016ல் போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, நான்காண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ … Read more

திடீரென பாய்ந்து நடைபாதையில் கவிழ்ந்த கார்.. நூலிழையில் உயிர்தப்பிய பெண்

லண்டன்: இங்கிலாந்தின் சோலிஹல் நகரில், ஒரு பெண் தனது குழந்தையை பேபி கேர் வண்டியில் வைத்து சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், தனது பாதையைவிட்டு விலகி திடீரென அந்த பெண்ணின் முன்னால் கவிழ்ந்தது. இதனால் தாயும், குழந்தையும் வாகனத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் என அங்கிருந்தவர்கள் பதறியடித்து மீட்பதற்காக விரைந்து சென்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் காயமின்றி நூலிழையில் உயிர்தப்பினர். காரை ஓட்டி வந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. … Read more

Myanmar armed forces capture town on Chinese border | சீனாவின் எல்லையில் நகரத்தை கைப்பற்றிய மியான்மர் ஆயுதக்குழு

பாங்காக், சீன எல்லையில் உள்ள முக்கிய நகரத்தை, மியான்மரின் இனப்போராட்ட ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி, 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும், அதற்கு அடுத்த ஆண்டே, தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ஆட்சியை கவிழ்த்த ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. … Read more

This Is Not Done By India: Nawaz Sharif On Pakistan Economy | பாக்., பொருளாதார சீர்குலைவுக்கு இந்தியா காரணமல்ல: நவாஸ் ஷெரீப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : ‛‛ பாகிஸ்தான் பொருளாதார சீர்குலைந்ததன் பின்னணியில் இந்தியாவோ, அமெரிக்காவோ அல்ல ” என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் கலந்துரையாடும் போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது: பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழியக் காரணம் இந்தியா அல்ல; ஏன், அமெரிக்காவோ ஆப்கன் கூடஅல்ல. நமது … Read more