Student visa: Australia tightens up | மாணவர் விசா: கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் உடைய பணியாளர்களுக்கான, ‘விசா’ வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்க, அந்நாடு முடிவு செய்துள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகளில் பல சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. கடந்த, 2022 – 23ம் ஆண்டு, ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. … Read more

பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான தெற்கு வஸிரிஸ்தானுக்கு அருகே உள்ள தேரா இஸ்மாயில் மாவட்டத்தில் தர்பான் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் பாகிஸ்தான் ராணுவத்தின் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த காவல் நிலையத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிச்சென்று தகர்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கையெறி … Read more

பாகிஸ்தான்: ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 23 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாலை நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

No chance to participate in the Republic Day function? | குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜோபைடன் பங்கேற்க வாய்பில்லை ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 2024 ஜனவரி 26ல் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் குவாத் அமைப்பு தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2024-ம் ஆண்டுஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்குமாறு குவாட் அமைப்பில் உறுப்பினராக உள்ள அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என இந்தியாவிற்கான … Read more

ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் – இஸ்ரேல்

ஜெருசலம், இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில், ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அக்.7 ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கி தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தி உள்ளது. இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700-ஐ கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு … Read more

லெபனானில் இருந்து ஏவிய 6 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கிலான குடிமக்கள் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மக்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்து உள்ளனர். இந்த போரில் 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என கூறியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு தெரிவிக்கின்றது … Read more

விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா: காரணம் என்ன?

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் அந்நாட்டிற்கு சென்று வருகின்றனர். குறிப்பாக சமீப காலங்களில் அங்கு செல்ல விரும்பி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துகள் வெளியாகி வந்தன. … Read more

ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் 5 இந்தியர்களை கொன்றவர் கைது

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் ஒரு ஓட்டலின் வெளிப்புறம் உள்ள பகுதியில் பலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் இந்தியர்களான விவேக் பாட்டியா (வயது 38), விஹான் (11), பிரதிபா ஷர்மா (44), ஜதின் குமார் (30) மற்றும் அன்வி (9) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அந்த கார் டிரைவரை … Read more

COP28 உச்சி மாநாட்டு அரங்கை அதிரவைத்த 12 வயது இந்திய சிறுமி – வைரல் வீடியோ

துபாய்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டு அரங்கை அதிரவைத்துள்ளார், இந்தியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருந்தது. யார் அந்த சிறுமி? 12 வயதான லிசிபிரியா கங்குஜம் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராக காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இன்றைய கூட்டத்தில் அவர் மாநாட்டு மேடையில் திடீரென ஒரு பதாகையுடன் தோன்றினார். அந்தப் பதாகையில் ”புதைபடிம எரிவாயுக்களுக்கு … Read more

Suicide attack on army base: 23 killed in Pakistan | ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானில் 23 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் இன்று(டிச.,12) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் … Read more