நிவாரண பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கி உள்ளது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. … Read more

சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே இவர்களை ஒடுக்குவதற்காக சிரிய ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டெய்ர் அல்-சூர் மாகாணத்தில் சிரிய ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இந்தநிலையில் ராணுவ முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு … Read more

போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்திய அமெரிக்கா… ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு

ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக காசாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த போரால், காசாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99-வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு … Read more

இருளில் சிக்கிய இலங்கை: நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அதிர்ச்சி

கொழும்பு, சிஸ்டம் செயலிழந்ததன் காரணமாக இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து … Read more

வங்காளதேச தீயணைப்பு படையில் முதன் முறையாக பெண்கள் நியமனம்

டாக்கா, உலகம் முழுவதிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் எல்லா துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்தவகையில் அண்டை நாடான வங்காளதேச வரலாற்றிலும் தீயணைப்பு துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பாலின பாகுபாட்டை நீக்கும் … Read more

உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்: சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. இதன்படி அமெரிக்கா, இந்தியா உட்பட 22 நாடுகளில் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தி உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. … Read more

Attack on farmers in Mexico kills 11 | விவசாயிகள் மீது தாக்குதல் மெக்சிகோவில் 11 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கொள்ளை கும்பலுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் டெக்ஸ்காட்டிட்லான் என்ற பகுதி யில் வசிக்கும் மக்கள், விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதிக்குள் தானியங்கி துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல், மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள் மீது, அக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் … Read more

Corona Virus:Rapidly spreading covid infection in singapore | சிங்கப்பூரில் வேகமாக பரவும் கோவிட் தொற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் ,மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகானில் பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுதும் பரவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. தற்போது கொரோனா தாக்கம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைகளில் … Read more

ரஷிய அதிபர் தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க புதின் ஆர்வம்

மாஸ்கோ, ரஷிய அதிபராக இருக்கும் புதினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அதிபர் தேர்தலை நடத்துவது குறித்து முடிவு எடுப்பதற்காக ரஷிய நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது 2024-ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி அதிபர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 5-வது முறையாக அதிபர் பதவிக்கு புதின் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெற்றால் 2036 வரை அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில் … Read more

Nawaz Sharif Says He Was Ousted In 1999 For Opposing Kargil Plan | கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பிரதமர் பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கடந்த1999ம் ஆண்டு, பாகிஸ்தான் ராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால் தான் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,1993 மற்றும்1999ம் ஆண்டுகளில் நான் ஏன் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என அனைவரிடமும் கூற வேண்டும். ராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை நான் எதிர்த்தேன். அது நடக்கக்கூடாது என்றேன். இதனால், அப்போதைய ராணுவ தளபதி … Read more