Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

US Retaliatory Strikes:  ஈரானுடன் தொடர்புடைய இலக்குகளுக்கு எதிராக 85க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தகவல்…

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் புரட்சிப் படைகள் (ஐஆர்ஜிசி) மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 85-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டத்தற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிரியாவில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், உளவுத்துறை மையங்கள், ராக்கெட், ஏவுகணைகள், ட்ரோன்கள், வெடிமருந்து சேமிப்புத்தளங்கள் … Read more

கென்யா: எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் தலைநகர் நைரோபியில் செயல்பட்டு வரும் எரிவாயு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த எரிவாயு ஆலைக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆலையில் இருந்த எரிவாயு டேங்க் வெடித்ததாக தகவல் … Read more

வடகொரியாவின் கொடூரமான தொழிலாளர் முகாம்கள்: தப்பி பிழைக்க வாய்ப்பே இல்லை

உலகின் மர்ம பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் வட கொரியாவில் கொடூரமான தொழிலாளர் முகாம்கள் இருக்கின்றன. அங்கிருந்து தப்பி செல்லாமல் இருப்பதே உயிர் பிழைத்திருக்க வழியாகும்.   

உலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும் இலங்கை

கொழும்பு, நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது மக்களின் கோபத்தை தூண்டி ஆட்சியாளர்களை பதவி விலக வைத்தது. எனினும் அந்த நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில் உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,244 கோடி) கடன் பெற இருப்பதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் … Read more

தென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

பியாங்க்யாங், கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாத வடகொரியா ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இதனை … Read more

World War III: மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டது! அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்!

Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில் அமெரிக்க அரசியல்! டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மையா?  

Harm America Will Be Retaliated: Warns Joe Biden | “அமெரிக்கருக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும்”: எச்சரிக்கிறார் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க வீரர்களுக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு சரியான … Read more

பிரான்ஸ்: ஈபில் டவரில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை அறிமுகம்

பாரிஸ், யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யு.பி.ஐ. பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம். இந்தியாவின் யு.பி.ஐ. சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் … Read more

Ex-Malaysia Prime Ministers sentence halved | மலேஷிய முன்னாள் பிரதமர் தண்டனை பாதியாக குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம், 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக நஜீப் ரசாக், கடந்த 2009ல் பதவியேற்றார். அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, 1 எம்.டி.பி., என்ற பெயரில் மலேஷிய மேம்பாட்டு நிறுவனத்தை, அப்போது அவர் நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இதன் நிதியை, அவர் … Read more