அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன் டாலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார். அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார். … Read more

அமெரிக்காவில் 'இந்திய தொழில் அதிபர் மீது ரூ.44 ஆயிரம் கோடி மோசடி புகார்

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழில் அதிபர் பங்கிம் பிரம்மபட். இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.இந்த நிலையில், பங்கிம் பிரம்மபட் மீது பிரபல அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம் கோடி) கடன் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளது. பிளாக்ராக் நிறுவனத்தின் தனியார் கடன் பிரிவான எச்.பி.எஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் பிற … Read more

சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட்பாட்’ குளியல்

பெய்ஜிங்: சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம் உள்ள பிரி​வில் பால், சிவப்பு … Read more

‘உங்கள் மனைவியின் மதத்திலும் ஈடுபாடு காட்டுங்கள்’ – துணை அதிபருக்கு அமெரிக்க இந்து அமைப்பு வலியுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி பெண்ணான உஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஜே.டி.வான்ஸ் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்க அரசின் குடியேற்ற கொள்கைகள் குறித்தும், ஜே.டி.வான்ஸ் குடும்பம் குறித்தும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த மாணவி கூறுகையில், “உங்கள் மனைவி உஷா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கிடையாது. உங்கள் … Read more

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?

கர்த்தூம்: வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப். இந்த நகரை கைப்பற்றும் தங்கள் முயற்சியில் தங்களுக்கு துஷ்பிரயோகம் செய்த போராளிகள் பலரை கைது செய்துள்ளதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷர் நகரில் சுமார் 1.77 லட்சம் மக்களின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த … Read more

தான்சானியா தேர்தல் வன்முறையில் 700 பேர் பலி

டொடோமா, கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 700 பேர் வரை உயிரிழந்ததாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்து உள்ளது.நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. பலியானோர் எண்ணிக்கையை … Read more

கரீபியன் நாடுகளை தாக்கிய புயல் – 49 பேர் பலி

கிங்ஸ்டன், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன. இதனிடையே, பசிபிக் பெருங்கடலில் மொலீசா என்ற புயல் உருவானது. இந்த புயல் நேற்று கரீபியன் நாடுகளை தாக்கியது. புயலால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொலீசா புயலால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதி … Read more

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிப்பு; வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவு

லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த புகாரை இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வர்ஜீனியா ஜியூப்ரே திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது … Read more

கனடா: கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை – கோர்ட்டு உத்தரவு

ஒட்டாவா, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியபோது ஒரு வாகனத்திற்கு தீவைத்துவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொலையாளிகளான இக்பால் காங்க்(24), டீன்ரே பாப்டிஸ்ட்(21) மற்றும் பல்ராஜ் பஸ்ரா(25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். … Read more

காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

ஒட்டாவா, கனடா எட்மண்டனில் வசித்து வந்தவர் ஆர்வி சிங் சாகூ (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் ஒரு ஓட்ட லுக்கு சாப்பிட சென்றார்.நள்ளிரவு அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவரது கார் மீது ஒருவர் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஆர்வி சிங் சாகூ அவரிடம் ஏன் என் காரில் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் … Read more