எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் – பிரதமர் மோடி

அடிஸ் அபாபா, பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் … Read more

எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு: ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

அட்டிஸ் அபாபா, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா – ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். மேலும் இந்தியா – ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எத்தியோபியா பிரதமர் … Read more

பஹ்ரைனில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து ரத்த தானம் செய்த த.வெ.க.வினர்

பஹ்ரைன், மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனின் 54 -வது தேசிய தினத்தை முன்னிட்டு, அங்குள்ள சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தலைவர் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பஹ்ரைன் 54 … Read more

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இஸ்ரேல் பயணம்; நெதன்யாகுவுடன் சந்திப்பு

ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். தலைநகர் ஜெருசலேம் சென்ற ஜெய்சங்கர் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கில்டான் சார், தொழில்துறை மந்திரி நிர் பர்கட்டை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்நிலையில், ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். … Read more

ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி ஹைதராபாத்தில் பிறந்தவர்… முழு பின்னணி என்ன?

Australia Bondi Beach Attack: ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து, ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் … Read more

“நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ..!” – பொதுமக்களை காப்பாறிய நபரை பாராட்டிய அந்நாட்டு பிரதமர்

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அமைந்துள்ளது. சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த கடற்கரை அருகே யூதர்களின் பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனை பார்த்ததும் உயிர் பயத்தில் மக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு … Read more

போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் – 8 பேர் பலி

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. அதேவேளை, கடல் வழியாக போதைப்பொருள் … Read more

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

பாங்காக், கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் விடுதி ஊழியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத விடுதி மேனேஜர்கள் , ஊழியர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோரை கைது செதனர். அதேவேளை, … Read more

கணவனுக்கு 520 பேருடன் தொடர்பு! கோபமே படாமல் சைலண்டாக பழிவாங்கிய மனைவி..

Husband Had 520 Affairs : ஒருவர், தனது கணவனுக்கு 520க்கும் மேற்பட்ட தொடர்பு இருப்பது தெரிந்தும், அவரை சைலண்டாக பழிவாங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.