''போரை நீங்கள் தொடங்கலாம், ஆனால் நாங்களே முடிப்போம்'' – அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை

தெஹ்ரான்: போரை நீங்கள் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதனை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஆயுதப் படைகளின் மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஈரான் ஆயுதப் படைகளுக்கான சட்டப்பூர்வ இலக்குகளை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க … Read more

‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்’ – இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ்: ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பதிவில், ‘ ஈரானில் உள்ள மெராபாத், மஷாத் மற்றும் டெஸ்ஃபுல் உட்பட 6 விமான நிலையங்கள், 15 ஈரானிய … Read more

கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்!

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு … Read more

இஸ்ரேல் தாக்குதலில் 6 விமான படை தளங்கள் அழிப்பு: ரஷ்யாவிடம் ஆயுத உதவி கேட்கும் ஈரான்

இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை … Read more

“எந்த சூழலிலும் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்” – அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை உறுதி செய்த ஈரான் 

டெஹ்ரான்: ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை … Read more

கதார் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்… ஈரான் கொடுத்த பதிலடி – இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

Iran Attacks US Air Base: கதார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து … Read more

ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின. அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை … Read more

வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை – தேர்தல் முறைகேடு புகாரில் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் … Read more

உலகமே உற்று நோக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' – ஈரான் இதை மூடினால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

Strait Of Hormuz: இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்தை அடுத்து, ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதகம் என்பதை இங்கு காணலாம்.