பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பாகிஸ்தான் மந்திரிசபையில் தீர்மானம்

இஸ்லாமாபாத், காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானும் தனது வான் எல்லையை மூடுவது, சிம்பா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட அடாவடி … Read more

கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு

மாஸ்கோ, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி மூத்த ரஷிய ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டதை அந்நாட்டு புலனாய்வுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ரஷிய அரசு ஊடகங்களில் வெளியான தகவல்படி, மாஸ்கோ ஒப்லாஸ்டின் ரஷிய நகரமான பாலாஷிகாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு கார் வெடித்து ஒருவர் கொல்லப்பட்டார். ரஷிய புலனாய்வுக் குழு பின்னர் இறந்தவரை ரஷியாவின் ராணுவத்தின் முக்கிய செயல்பாட்டு இயக்குநரகத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் … Read more

போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் ஆண்டவரின் உடல் அவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு நண்பகல் 12 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி … Read more

பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் – பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத், காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானும் தனது வான் எல்லையை மூடுவது உள்ளிட்ட அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் … Read more

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்; யூடியூப் தகவல்

வாஷிங்டன், உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் யூடியூப். இதில் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்தும் பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர். யூடியூப் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டின் ஏப்ரல் 23ம் தேதி யூடியூபில் முதல் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி, ஜாவித் கரீம் ஆகியோரால் தொடங்கப்பட்ட யூடியூப் தற்போது உலகின் முன்னணி சமூகவலைதளமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் … Read more

“அந்த மோசமான வேலை தவறுதான்…” – பயங்கரவாதத்துக்கு துணை போவதை ஒப்புக்கொண்ட பாக். அமைச்சர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது அந்நாட்டின் ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸ் விவாதத்தில் பங்கேற்ற குவாஜா எம்.ஆசிப்பிடம், “இந்த பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் அமைச்சர், “கடந்த 30 … Read more

'இந்திய-பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்': ஐநா

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் … Read more

'நிறுத்துங்கள் புதின்; வாரம் 5 ஆயிரம் வீரர்கள் பலியாகின்றனர்' – கண்டனம் தெரிவித்த டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். ஆனால் அன்றைய தினத்திலும் ரஷியா தாக்குதல் … Read more

பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு

கராச்சி, காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா பதிலடி … Read more

சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்… எல்லையில் ராணுவம் குவிப்பு

இஸ்லாமாபாத், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது பெரிய அளவில் … Read more