நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!

காத்மண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேபாள ராணுவத் … Read more

நேபாளம் வீதிகளில் தூய்மை பணியில் ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தீவிரம்!

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிதைந்த சுவர்களில் மீண்டும் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், துடைப்பங்கள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் பைகளுடன் ஜென் ஸீ இளைஞர்கள் நேபாள தலைநகர் முழுவதும் நடைபாதைகளைத் சுத்தம் செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் … Read more

டிரம்ப் ஆதரவாளர் கொலை: 22 வயது இளைஞர் கைது – யார் இந்த டைலர் ராபின்சன்?

Charlie Kirk Murder Suspect Arrested: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிரிக்கை சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தவர் சார்லி கிர்க். கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிக் பங்​கேற்ற​போது மர்ம … Read more

அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

கொழும்பு: இலங்​கை​யில் தற்​போது ஆட்​சி​யில் இருக்​கும் தேசிய மக்​கள் சக்தி கூட்​ட​ணி, தேர்​தலுக்கு முன் அளித்த வாக்​குறு​தி​யின்​படி முன்​னாள் அதிபர்​களின் சலுகைகளை ரத்து செய்​யும் மசோ​தாவை கொண்டு வந்​தது. இந்த மசோதா இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் நிறைவேற்​றப்பட்​டது. இதையடுத்து முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80), கொழும்​பு​வில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று வெளி​யேறி​னார். ராஜபக்ச கடந்த 2015 முதல் இந்த வீட்​டில் வசித்து வந்​தார். ராஜபக்ச கடந்த 2004 முதல் 2005 வரை … Read more

கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்: ஊழியர்களுக்கு சீன நிறுவனம் சலுகை

பெய்ஜீங், உடல் பருமன் என்பது தற்போது உலக அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவலாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ளது. இதனால், உடல் பருமனை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் உடல் பருமனை குறைக்க வித்தியாசமான முயற்சியை சீனாவை … Read more

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆளும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார். கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிக் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: … Read more

‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்’ – நேபாள முன்னாள் பிரதமர்

காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை … Read more

நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு

காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத் … Read more

நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை; கனடாவில் இந்திய வம்சாவளி பெண் டாக்டரின் லைசென்ஸ் பறிப்பு

ஒட்டாவா, கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே. இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை சுமன் குல்பே ஒப்புக்கொண்டார். அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே கூறியுள்ளார். மேலும், அவரது பயிற்சியாளர் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், … Read more