Pirate attempt to hijack ship; Defeated by the Indian Navy | கப்பலை கடத்த கொள்ளையர் முயற்சி; முறியடித்தது இந்திய கடற்படை

புதுடில்லி : சோமாலிய கடற்பகுதியில், கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால், அவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். சரக்கு கப்பல் அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு … Read more

Titanic II: கடலில் களமாடுமா டைட்டானிக் கப்பல்? ஆடம்பரத்துக்கும் அன்புக்கும் அடையாளமான கப்பல்!

Titanic II Updates : 2027இல் கடலில் களமிறங்கும் டைட்டானிக் கப்பல்! கப்பல் கட்டுமான பணிகளுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்தப் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்

இந்தியாவுடனான உறவில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக, இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.

Pakistan raised questions about CAA at UN: India condemned | ஐ.நா.,வில் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பிய பாக்.,: இந்தியா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் விஷயங்கள் குறித்து போதுமான புரிதல் இல்லாமல் அந்நாடு உள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், ‛‛அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமைச் சட்டம் ஆகியவை குறித்து குறிப்பிட்டார். இதற்கு பதிலடி … Read more

டேட்டிங் செய்ய 5 ஆயிரம் கி.மீ பயணித்த பெண்: கடைசியில் நடந்த ட்விஸ்ட்

லண்டன், உலகில் தினம் தினம் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் இன்றைய காலகட்டத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன. அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர். அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார். அங்கு நேரில் சென்றபோதுதான் தெரிந்தது, … Read more

காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் … Read more

கனடா: தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி: சந்தேக வழக்குப் பதிந்து போலீஸ் விசாரணை

புதுடெல்லி: கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் மார்ச் 7ம் தேதி நடந்ததுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தேக மரணம் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த இந்திய வம்சாவளி குடும்பம் பிராம்டன் பகுதியின் பிக் ஸ்கை வே மற்றும் வான் … Read more

சிஏஏ-வை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்

வாஷிங்டன், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இந்தநிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட … Read more

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? பொய் சொல்லி தலைகுனிந்த பாகிஸ்தான்!

Cash Strapped Pakistan In Problem : IMF இடம் சொன்ன பொய்யால் பாகிஸ்தான் அவமானப்பட்டு நிற்கிறது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச அளவில் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

ரஷிய அதிபர் தேர்தல்: 11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

மாஸ்கோ: ரஷியாவில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷிய பகுதிகள் மற்றும் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். ரஷியாவின் 11 நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களிக்கிறார்கள். மின்னஞ்சல் வாயிலாகவும் வாக்களிக்கிறார்கள். வெளிநாடுகளில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இந்த … Read more